அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கிறது. உயிர்களைக் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு. உலகத்திற்கு...
Author - காயத்ரி. ஒய்
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...
பஸ் நிறைந்து வந்தது. ஏறியதும் இஞ்சினுக்கு அருகில் சீட்டின் மீது சாய்ந்து வாகாக நின்று கொண்டேன். சூடாக இருந்தாலும் இதுதான் பாதுகாப்பான பகுதி. கால் மிதிபடாது. லஞ்ச் பேக்கையும் கைப்பையையும் இருக்கையில் சுகமாக உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுத்தேன். தீபாவளி நெருங்குவதால், துணிமணி எடுப்பதற்காக டவுனுக்குக்...
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்கி, சுற்றத்தாரை அழைத்து மகிழ்விக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஆந்திரப் பிரதேசத்தில் பொம்மலா கொலுவு என்றும், கர்நாடகாவில்...
புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கண்டறியப்பட்டது 1930-ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு நாமெல்லாம் சூரியக் குடும்பத்தில் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கிரங்கள் என்றே படித்தோம். 2006-ஆம் ஆண்டு வான் விஞ்ஞானிகள், புளூட்டோ ஒரு தனிக்கோள் அல்ல, சூரியனைச் சுற்றி வந்தாலும் அதுவொரு குறுங்கோள் (Dwarf Planet)...
விநாயகரை வழிபட்டு வணங்கி எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவது ஆதி காலத்திலிருந்தே நிலவிவரும் வழக்கம். கோயில் குடமுழுக்கில் தொடங்கிப் புது வீட்டுக்குக் குடி புகுவது வரையில் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் கணபதி ஹோமம் செய்தே தொடங்கி வைக்கப்படும். பெரிய நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகள் முதல் வீட்டு...
தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’ சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்? கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும்...
இந்தியாவின் பிரக்யான் ரோவர் நிலவில் பத்திரமாகத் தரையிறங்கிய தினத்தில் இன்னொரு சரித்திரச் சம்பவமும் நிகழ்ந்தது. உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் மேக்னஸ் கார்ல்ஸனுடன் ட்ரா செய்தார். செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன்...
ஒரு நாட்டு மன்னன் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது தமது படைகள் தங்குவதற்கென்றும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். இதுபோல் உள்ள இடங்களைப் பாடிவீடு என்று அழைப்பர். அப்படித்தான் சென்னையில் அண்ணா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இடத்திற்கு பாடி என்று...
பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன் கோயில்கள் இருப்பது போல பிரம்மாவுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது. அதற்கு காரணம் ஈசனின் சாபம். நெருப்புத் தூணாய் நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும், பிரம்மனும் புறப்பட்டனர். அடியைக் காண முடியவில்லை என மஹாவிஷ்ணு ஒத்துக்கொண்டார். ஆனால் முடியைக்...