Home » Archives for காயத்ரி. ஒய்

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

ஆன்மிகம்

வெண் பன்றியின் பின்னால் போ!

மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...

Read More
கோடை

வெயில் கால டிப்ஸ் 100

தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...

Read More
உணவு

அரிசி இல்லாத ஓட்டல்

மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர். டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட்...

Read More
ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது...

Read More
ஆளுமை

ஒரு தொழிலதிபர், பேராசிரியர் ஆகிறார்!

டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...

Read More
சுற்றுலா

வடிவேலு போல் ப்ளான் பண்ணி டூர் போவது எப்படி?

ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா...

Read More
ஆன்மிகம்

மண் முந்தியோ? மங்கை முந்தியோ?

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம்...

Read More
கிருமி

மீண்டும் மீண்டும் கோவிட்

மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...

Read More
கோடை

ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…

ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...

Read More
சுற்றுலா

அண்ணா நகரின் உச்சம்

அண்ணாநகர் டவருக்கு ஒரு சரித்திரச் சிறப்பு உண்டு. சென்னையின் அடையாளங்களுள் அது ஒன்று. கடந்த 2011ம் ஆண்டு அந்த டவரில் ஏற அனுமதி நிறுத்திவைக்கப்பட்டது. டவர் மூடப்பட்டது. காரணம், மேலே ஏறிக் குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார்கள் என்பதுதான். இனி அப்பிரச்னை இல்லை. ஆளுயர இரும்புக்கம்பிகள் போடப்பட்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!