Home » ராமர் ஆலயம்
ஆன்மிகம்

ராமர் ஆலயம்

அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கிறது.

உயிர்களைக் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு. உலகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் மீன், ஆமை, வராக அவதாரங்களெடுத்து தீயவர்களை ஒழித்து மக்களைக் காத்தருள்பவர். ஒருமுறை, மக்கள் மனதில் கொப்பளிக்கும் தீய எண்ணங்களை விரட்டவும் அறநெறிப்படி வாழ்ந்து காட்டவும் மனிதனாகப் பிறப்பெடுக்கத் திருவுளம் கொண்டார். தசரதரின் மகனாக, ராமபிரானாக அவதரித்தார்.

துஷ்டர்களை அழிக்க ஒரு வில், தன்னைச் சரணமடைந்தோருக்கு ஒரு அபயச் சொல், ஜென்மம் முழுதும் இணைந்து வாழ ஒரு இல் (மனைவி) என்று உதாரணப் புருஷனாக வாழ்ந்து காட்டினார். அந்தத் தெய்வீகப் பிறப்பு நிகழ்ந்த இடம் அயோத்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!