இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பது 5ஜி ஏல விவகாரம்தான். இந்த ஏலத்தில் வந்த தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததில் பாதிகூட இல்லை என்பதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுவிட்டது. அலைக் கற்றை 3ஜியின் ஏலத்தொகை 51,000 கோடி; 4ஜியின் ஏலத்தொகை 78,000 கோடி; 5ஜியின் ஏலத்தொகை 1,50,000 கோடி. ஆனால் 2ஜி...
Author - செ இளங்கோவன்
ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளை முழுமையாகக் கொடுத்திருப்பார்கள். பலர் தங்கள் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பார்கள். அதற்குக் காரணம்...
கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர் திடீரென்று மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டுத்தான் வருகிறது. சென்னையிலேயே இப்படியென்றால் மற்ற பகுதிகளில் எப்படியோ! ‘மின்சார வாரியம் மின் கட்டணத்தை...
இப்போதைய ஊடக விவாதங்களில் பங்கு பெறுவோரை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாலோ என்னவோ, அரசியல் விமர்சகர்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் என்றும் யார் யாரையெல்லாமோ சகட்டுமேனிக்கு அழைத்து வந்து விவாதம் செய்ய வைக்கிறார்கள்...
‘ஆ. இராசா தனித்தமிழ்நாடு கேட்கிறார். கேட்டுத்தான் பாருங்களேன்? அடுத்த ஐந்தே நிமிடத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படிக் கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்’ என்று தமிழக பாஜக கடும் எச்சரிக்கை செய்துள்ளது...
‘மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில், மனித ஆன்மா கடந்து செல்லும் பாதை’ என்று காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, கெட்டிப்பட்டிருந்தபோதுதான் காரல் மார்க்ஸும் காந்தியும் வேறு மாதிரி சிந்தித்தார்கள். காந்தியின் சித்தாந்தத்திற்கும் காரல் மார்க்ஸின் சித்தாந்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. ‘பணக்காரர்கள்...
இன்று ஏக பரபரப்பாக ‘ஒத்தையா இரட்டையா’ விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். அல்லர் என்றால் நம்ப முடிகிறதா? தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது (அக்டோபர்10, 1972) அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த...
உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய இராணுவமே அளவில் பெரிது. இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பகுதி, கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடி உயரத்திற்கும் மேலிருக்கிறது. எலும்பையும் உறைய வைக்கும் மைனஸ் நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ். அங்கு பாதுகாப்புப்...
“மதம் எப்பொழுதும் அரைகுறையானதுதான். மதம் என்பது மாறாமல் கடைப்பிடிக்கப்படும் சடங்கு நிறைந்த சம்பிரதாய வழிபாடாகவும், நிலைத்த சமயக் கொள்கைகளாகவும் சீரழிந்து விடுகிறது. மதம் என்பது உண்மையில் அறிவுமன்று. நாம் என்ன செய்கிறோம்? ஒரு மதத்தின் சில உண்மைகளையும் சின்னங்களையும் அல்லது குறிப்பிட்ட விதமான...
உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...