Home » Archives for September 7, 2022 » Page 2

இதழ் தொகுப்பு September 7, 2022

உலகம்

வங்கக் கடலில் ஒரு நரகத் தீவு

ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை. ரோஹிங்கியா இனக்குழுவைச்...

Read More
இசை

எடுத்ததும் கோத்ததும்

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். அதுதான் உண்மை. இசை மொத்தமும் இந்த ஏழு ஸ்வரங்களை வைத்துத்தான். அதற்குள் எத்தனை எத்தனை புதிய பாடல்களை உருவாக்குகிறார்கள், காலத்தில் நிலைக்க வைக்கிறார்கள் என்பதே இசையமைப்பாளர்களின் பெருமை. ஆனால்...

Read More
உலகம் சுற்றுலா

ஒரு மால். ஒரு திர்ஹாம். ஒரு சிற்றுலா.

பெற்றோரைத் தவிர பிற அனைத்தையும் வாங்க முடிகிற துபாய் மால்களில் ஒன்றில் எனக்கான செருப்புக் கடை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். எல்லா மால்களிலும் செருப்புக் கடைகள் உண்டு, விதவிதமான செருப்புகள் கிடைக்கும் என்றாலும்கூட, துபாய் மாலில்தான் புது வரவுகள் இருக்கும். அழகான செருப்பு என்பதைவிட, என்...

Read More
வென்ற கதை

‘மாணவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன்!’ – டாக்டர் மதன் சங்கர்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 1973 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. அக்கல்லுரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் மதன் சங்கர். இன்று அதே கல்லூரியில் முதன்மையர் (டீன் – அகாடெமிக்ஸ்) ஆக இருக்கிறார். இவர் தன்னுடைய இருபத்தியிரண்டாண்டு அனுபவத்தில் வெவ்வேறு...

Read More
உலகம்

சம்பாதித்துக்கொண்டே படித்தால் என்ன?

கடந்த வாரம் தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுத் திறன் இணையத்தளம் திடீரென உலக அளவில் கவனம் பெற்றது. டிவிட்டரில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டது. மனிதவளத்துறையில் பணியாற்றுவதால் ஆர்வம் மேலிட, இணையத்தளம் சென்று பார்வையிட்டேன். ஒபாமா – சிங் உடன்பாட்டு முறையில் இந்தியாவில் கல்வித்துறையை மேம்படுத்த...

Read More
ஆன்மிகம்

சித் – 15

15. நீரில் இருந்து நீருக்கு… ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று சாமரம் வீசிக்கொண்டு இருந்தார்கள். இந்திர லோகத்தில் இருந்து இந்தக் காட்சியை கண்டால் இந்திரனுக்குக் கூடப் பொறாமை வரும் அளவுக்குக்...

Read More
வரலாறு முக்கியம்

இசை வரலாற்றில் இளையராஜாவின் இடம் எது?

இசை இல்லாமல் தமிழர் வாழ்வு இருந்ததில்லை. நமது வாழ்விலும் மொழியிலும் இசையின் தாக்கம் எத்தகையது என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை அளிக்க முடியும். தமிழ்மரபின் மூத்த இறைவடிவமான சிவனையே கூத்தன் என்ற அடைமொழி கொடுத்து வழங்கிய இசைப்பெயரின் மூலம் அது இயல்பாக விளங்குகிறது. தமிழில் விளங்கும் அரிய...

Read More
இசை

தாய்ச்சோறு

என் பெரிய தகப்பனார் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். பணியின் பொருட்டு அவர் பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர். பெரும்பாலும் அவை காவிரியைச் சுற்றிய நகரங்களாகத்தாம் இருந்தன. அத்தகைய பணிச்சுற்றில் சில ஆண்டுகள் ஈரோட்டுக்கருகிலுள்ள முத்தூரில் குடியிருந்தார். அவ்வமயம் அவர் வீட்டில் விழாவும்...

Read More
இசை

ராஜ வீதி

இளையராஜா கடந்து வந்த பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இக்கட்டுரை. பிறப்பு பண்ணைபுரம், தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம். கோவில்பட்டி சூரங்குடியிலிருந்து ராமசாமி என்பவர் பஞ்சத்தினால் பண்ணைபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். மதுரை கலெக்டருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் எஸ்டேட்...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 15

15. முடியாத யுத்தம் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு. இயேசுநாதர் பிறப்பதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதக் குடியேற்றம் நிகழ்ந்த பிராந்தியம் என்று தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. தனிச் சிறப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதனாலேயே ஒரு தேசத்தின் எல்லைகளை ஆளுக்குக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!