Home » ஆபீஸ் – 69
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 69

69 சந்தர்ப்பங்கள்

‘ஏய் என்னா மேன். எப்பப் பாத்தாலும் உனக்கு பொண்ணுங்களோட பேச்சு. சீட்ல உக்காந்து வேலைய பாரு. பொம்பள கிட்டப் பேசினா காது அறுந்துடும்னு உங்க அம்மா சொல்லலையா.’ என்று டிஓஎஸ் ரீட்டா மேடம் சொன்னதைக் கேட்டு ஹாலே சிரித்தது. அவன் பேசிக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா பெண்களும் சிரித்தன. சட்டென கோபம் வந்தாலும் அவர் சொன்ன விதம் காரணமாக அவனும் சிரித்துவிட்டான்.

டெல்லிக்குப் போய்வந்தபின் – பாட்சா கடிந்துகொண்டதைப்போல கையோடு குவார்ட்டர்ஸ் காரியம் நடக்கவில்லை என்றாலும் ரங்கன் துரைராஜிடம் போன பணம் போனதுதான் திரும்பக் கிடைக்க வாய்ப்பேயில்லை என அவருடைய முன்னாள் மனைவி மூலமாகவே தெரிந்துவிட்டிருந்தாலும் – மிகுந்த உற்சாகத்துடன் திரிந்துகொண்டிருந்தான்.

அதற்கு முக்கியமான காரணம், சுந்தர ராமசாமியிடமிருந்து வந்திருந்த கடிதம்தான். அது வெறும் பதில் கடிதமில்லை. அவன் எழுதியிருந்த கடிதமும் அவரைப் பார்த்துவிட்டு வந்ததற்கான சம்பிரதாயக் கடிதமாக இருக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!