Home » Archives for முருகு தமிழ் அறிவன்

Author - முருகு தமிழ் அறிவன்

Avatar photo

தமிழ்நாடு

சிங்கப்பூரில் ஸ்டாலின்: சாதித்தது என்ன?

இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது. முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -27

27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -26

26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 25

25 பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) அறிமுகம் இயற்பெயர் ஒன்று. ஆனால் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற அடைமொழிகள் இவரது கவித்திறத்தால் இவருக்கு வழங்கப்பட்ட புகழ்ப்பெயர்கள். தனது இயற்பெயரையே மறுத்து தனது உளம்போற்று நாயகரின் தொண்டன் என்ற முகமாகத் தனது பெயரை வைத்துக் கொண்டார் இவர். அத்தனை...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -24

24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990) ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 23

23 பாபநாசம் சிவன்  (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -22

கா.சுப்பிரமணியபிள்ளை (30.11.1888 – 03.12.1969) அறிமுகம் தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். நெல்லை மண் தமிழுக்கு அளித்த பல மாணிக்கங்களுள் ஒருவர். தமிழ் இலக்கிய வரலாறை முதன் முதலில் எழுதிய பெருமைக்கு உரியவர்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 20

கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -19

19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!