‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா அதன் குண்டு உடலைத் தூக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு ஓடி எப்படியோ முதல் இடத்தை பிடித்துவிடுகிறது. சிங்கம், புலி போல அசைவப் பிரியர் இல்லை பாண்டா. அது சுத்த சைவம். மூங்கிலின் வேர்கள், தண்டுகள், தளிர்கள் மட்டுமே சாப்பிட்டுக் குண்டான ஜீவன். இப்படிப்பட்ட பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பந்தயத்தில் முதலிடத்தைப் பிடிப்பது என்பது சுலபமான காரியமா? எவ்வளவு பெரிய சாதனை! ஆனால் பாண்டாவின் இந்தத் தொடர் சாதனை இம்முறை பறிபோய் விட்டது என்றே பலர் சொல்கின்றனர். என்ன திடீரென்று பாண்டா, புலி என்று மழலையர் கதை சொல்கிறாய் என்று கேட்காதீர்கள். பாண்டா என்பது சீனா. புலி என்பது இந்தியா. பந்தயம் ஜனத்தொகை.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment