ஆதி மனிதனின் பெரும்பாலான பொழுது உணவைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சென்றது. சமயத்தில் உணவுக்காக அவன் விலங்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டி வந்தது. விலங்கு வீழுமானால் அதுவே உணவாகவும் ஆனது. இதற்கான முயற்சியும், காலமும் அரும்பாடுகளை மனிதனுக்குக் கொடுத்தன. எனவே குழுவாகச் சேர்ந்து உணவைத் தேடும் பழக்கமும், அது தந்த அனுகூலங்களும் அவனுக்கு அதிகப் பொழுதுகளைத் தந்தன. எனவே வேட்டைக் கருவிகளும், உழவுக் கருவிகளும் உருவாயின. உணவைத் தேடுவதற்கான நேரம் குறைந்து, உணவைச் சேமித்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதைப் படித்தீர்களா?
கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப்...
Add Comment