Home » மீனாட்சி அம்மாள்: ருசி வாத்யார்
உணவு

மீனாட்சி அம்மாள்: ருசி வாத்யார்

மீனாட்சி அம்மாள்

யூ ட்யூபில் சினிமாவை விஞ்சும் வெற்றி என்றால் அது இன்றைக்கு சமையல் குறிப்பு சானல்களுக்குத்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான புதிய சமையல் வீடியோக்கள். தெரிந்ததுதான், ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் புதிய பதிப்புகளை ஆர்வம் குன்றாமல் மக்கள் பார்க்கிறார்கள். வீட்டு உணவு, வீதி உணவு, நட்சத்திர ஓட்டல் உணவு என்று வித விதமாக விடியோக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. உண்பது ஒரு ருசி என்றால் அதைச் சமைக்கும்போது பார்ப்பது இன்னொரு ருசி என்பது ஒரு காரணம். இந்தத் தலைமுறை யூ ட்யூப் பார்த்துத்தான் சமையலே கற்கிறது என்பது மறுக்க முடியாத முதல் காரணம்.

சமையலை முறைப்படிக் கற்றுத் தரலாம் என்று முதல் முதலில் தமிழ் நாட்டுக்குக் கற்றுத் தந்தவர் மீனாட்சி அம்மாள். இவருடைய ‘சமைத்துப் பார்’ புத்தகம் இன்று வரை விற்பனையில் குன்றாத வேகம் காட்டுவது. இன்றும், திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு ‘சமைத்துப் பார்’ பிரதியை அன்பளிப்பாகத் தருவோர் உண்டு. அம்மாவிடம் கற்காததை இந்தப் புத்தகத்தில் கற்று புருஷனைச் சமாளிக்கும் பெண்கள் படை மிகப் பெரிது.

யார் இந்த மீனாட்சி அம்மாள்? ஆயிரம் பேர் அவருக்குப் பின்னால் வந்துவிட்டாலும் அதி நவீன சமையல் முறையெல்லாம் அறிமுகமாகிவிட்டாலும் இந்தப் பெண்மணியின் புத்தகத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு மவுசு?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!