Home » Home 07-09-2022

வணக்கம்

எழுத்து, இசை, ஓவியம் உள்ளிட்ட எந்த நுண்கலையாயினும் சரி. சராசரி ரசனைக்கு / மேம்பட்ட ரசனைக்கு என்று எப்போதும் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வந்திருப்பார்கள். இரு தரப்பு ரசிகர்களுக்கும் எப்போதும் உரசல் இருக்கும். ரசனை மாறுபாடு சார்ந்த மோதல்கள் எழும். காலம் தோறும் உண்டு. உலகம் முழுதும் உண்டு.

இந்தியாவில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் உண்டென்றால் அது இளையராஜா மட்டுமே. அவரை விமரிசிப்பவர்கள்கூட இசைக்கு அப்பாற்பட்ட விவகாரங்களுக்காக மட்டும்தான் விமரிசிப்பார்களே தவிர, இசையை அல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்ணைப் போல வாழ்வோடு ஒன்றிவிட்ட இசை அது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறது. அவர் இசையமைக்கும் விதம் குறித்துக் கார்த்திகேயன் நாகராஜன் எழுதியிருக்கும் கட்டுரையும் சரி; எந்த அம்சங்கள் அவரை ‘இசையமைப்பாளர்’ என்கிற பொதுவான இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து மேதை என்ற பீடத்தில் அமர வைக்கிறது என்று ஆராயும் என். சொக்கனின் கட்டுரையும் சரி; எப்படி அவர் நம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறார் என்று சுட்டிக் காட்டும் மகுடேசுவரனின் கட்டுரையும் சரி. வெறுமனே துதி பாடும் எழுத்தல்ல. மிகுந்த நுட்பமும் கூர்மையும் கொண்ட கவனிப்பின் விளைவுகள். இளையராஜாவை ரசிப்பதை வாழ்வின் முதல் பணியாகவும் பிறவற்றை அடுத்தும் வைத்துக்கொண்டு வாழ்பவரான பொ. காத்தவராயன், ராஜாவின் பாடல்கள் எப்படியெல்லாம் பிறரால் கையாளவும் களவாடவும் பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் பாடல்களை உடனுக்குடன் யூ ட்யூபில் கேட்க வசதியாக ஆங்காங்கே லிங்க் தரப்பட்டுள்ளது.

சென்ற வாரம் காலமான முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத்தின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த கம்யூனிஸ்டுகள், அந்தக் கட்டமைப்பு சிதைந்ததன் பின்னணியையோ, அதற்கான உண்மைக் காரணங்களையோ குறிப்பிட்டுப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. சோவியத் சிதைந்ததற்கு முழுப் பொறுப்பும் கோர்பசேவ்தான் என்று பழியைத் தூக்கி அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மை முற்றிலும் வேறு. கோர்பசேவுக்கு முன்னால் சோவியத்தை ஆண்டவர்களின் காலத்து அவலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெடித்துச் சிதறியபோது கோர்பசேவ் பதவியில் இருந்தார் என்பதே சரி. மறுமலர்ச்சி-வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அவர் பேசியதும் அதை நோக்கி அடியெடுத்து வைத்ததும் ரஷ்யர்களுக்கு அன்று புரியவில்லை. மேற்குலகின் கைக்கூலியாகிவிட்டார் என்று சொன்னார்கள். இன்று வரை அவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதனால்தான் அவரது இறுதிச் சடங்குகளுக்கு புதின் செல்லாததுகூட அங்கே ஒரு பொருட்டாக இல்லை. கோர்பசேவை முன்வைத்து, சோவியத் என்ற கட்டமைப்பு சிதறியதன் பின்னணியை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.

இவை தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் மொத்தமாக விரட்டியடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் நரகத் தீவு குறித்து சிவசங்கரி எழுதியுள்ள கட்டுரை, சசி தரூர் குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாய் மாலில் ஒரு திர்ஹாமுக்கு என்ன வாங்க முடியும் என்று ஆராயும் நசீமாவின் கட்டுரை, அதிகம் தெரியாத வாட்சப்பின் சில நூதன வசதிகளை வெளிச்சமிடும் வெங்கடரங்கனின் கட்டுரை என இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். மேலும் சிறப்பான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

சிறப்புப் பகுதி: இளையராஜா

இசை

ராஜ வாத்தியார்!

‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று...

aim தொடரும்

aIm it -2

அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து...

இசை

ஷேக் சின்ன மௌலானா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து...

அறிவியல்-தொழில்நுட்பம்

குரலாப்பரேஷன்

அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ  சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது...

நம் குரல்

டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...

சுற்றும் பூமி

உலகம்

அமைதிக்கு யார் தடை?

நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல்...

உலகம்

மாற்றிக் காட்டிய எக்ஸ்போ

மாற்றுத்திறனாளிகளுக்கான  ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக...

உலகம்

குறி வச்சா இரை விழணும்: இது கிம் ஜாங் உன் ஸ்டைல்

போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர்...

உலகம்

கடலில் மூழ்கிக் காசு எடுக்கும் கன்னிகள்

‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் ...

உலகம்

அமெரிக்க அதிபர் அம்மாவா? ஐயாவா?

அமெரிக்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கிவிட்டிருக்கிறது. அஞ்சல் வழி வாக்களிப்பவர்களும் பதிய...

சிந்தித்த வேளை

நம் குரல்

மழையும் பிழையும்

மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு...

தொடரும்

aim தொடரும்

AIM IT – 28

ஏ.ஐயும் விக்கெட் கீப்பரும் ஒன்னு எண்ணற்ற ஏ.ஐ கருவிகள் வந்துவிட்டன. நாள்தோறும் பல புதிய கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. பார்த்தவுடன், “ஆ.. சூப்பர்…” என்று சில கருவிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், “நான் நெனச்ச மாதிரி இல்லயே…” என்று ஏமாற்றமளிக்கின்றன. இச்சூழலை எவ்வாறு கையாள்வது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 123

123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 28

28. அதுவா? நாமா? கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன. முதலாவது அவன் இல்லை ஆனால் அது இருக்கிறது என்கிற தெளிவு. இரண்டாவது, மதங்களின் அடியொற்றிச் சென்றால் அதைக் கண்டடைய முடியாது என்கிற இன்னொரு தெளிவு. உலகில்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 28

28. வென்ற கதை ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 28

28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 127

127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...

Read More
உரு தொடரும்

உரு – 28

28 அமைதியோ அமைதி கணித்தமிழ் ஆர்வலர்கள் பலரும் முத்து கார் வாங்கப் போன கதையை அவ்வப்போது சிலர் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருப்போம். வால்வோ கார், புதிய மாடல் அறிமுகமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஷோரூம் போனார். புதிய காரின் எல்லா புதிய அம்சங்களையும் பார்வையிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது...

Read More
error: Content is protected !!