Home » Home 07-09-2022

வணக்கம்

எழுத்து, இசை, ஓவியம் உள்ளிட்ட எந்த நுண்கலையாயினும் சரி. சராசரி ரசனைக்கு / மேம்பட்ட ரசனைக்கு என்று எப்போதும் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வந்திருப்பார்கள். இரு தரப்பு ரசிகர்களுக்கும் எப்போதும் உரசல் இருக்கும். ரசனை மாறுபாடு சார்ந்த மோதல்கள் எழும். காலம் தோறும் உண்டு. உலகம் முழுதும் உண்டு.

இந்தியாவில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் உண்டென்றால் அது இளையராஜா மட்டுமே. அவரை விமரிசிப்பவர்கள்கூட இசைக்கு அப்பாற்பட்ட விவகாரங்களுக்காக மட்டும்தான் விமரிசிப்பார்களே தவிர, இசையை அல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்ணைப் போல வாழ்வோடு ஒன்றிவிட்ட இசை அது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறது. அவர் இசையமைக்கும் விதம் குறித்துக் கார்த்திகேயன் நாகராஜன் எழுதியிருக்கும் கட்டுரையும் சரி; எந்த அம்சங்கள் அவரை ‘இசையமைப்பாளர்’ என்கிற பொதுவான இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து மேதை என்ற பீடத்தில் அமர வைக்கிறது என்று ஆராயும் என். சொக்கனின் கட்டுரையும் சரி; எப்படி அவர் நம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறார் என்று சுட்டிக் காட்டும் மகுடேசுவரனின் கட்டுரையும் சரி. வெறுமனே துதி பாடும் எழுத்தல்ல. மிகுந்த நுட்பமும் கூர்மையும் கொண்ட கவனிப்பின் விளைவுகள். இளையராஜாவை ரசிப்பதை வாழ்வின் முதல் பணியாகவும் பிறவற்றை அடுத்தும் வைத்துக்கொண்டு வாழ்பவரான பொ. காத்தவராயன், ராஜாவின் பாடல்கள் எப்படியெல்லாம் பிறரால் கையாளவும் களவாடவும் பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் பாடல்களை உடனுக்குடன் யூ ட்யூபில் கேட்க வசதியாக ஆங்காங்கே லிங்க் தரப்பட்டுள்ளது.

சென்ற வாரம் காலமான முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத்தின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த கம்யூனிஸ்டுகள், அந்தக் கட்டமைப்பு சிதைந்ததன் பின்னணியையோ, அதற்கான உண்மைக் காரணங்களையோ குறிப்பிட்டுப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. சோவியத் சிதைந்ததற்கு முழுப் பொறுப்பும் கோர்பசேவ்தான் என்று பழியைத் தூக்கி அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மை முற்றிலும் வேறு. கோர்பசேவுக்கு முன்னால் சோவியத்தை ஆண்டவர்களின் காலத்து அவலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெடித்துச் சிதறியபோது கோர்பசேவ் பதவியில் இருந்தார் என்பதே சரி. மறுமலர்ச்சி-வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அவர் பேசியதும் அதை நோக்கி அடியெடுத்து வைத்ததும் ரஷ்யர்களுக்கு அன்று புரியவில்லை. மேற்குலகின் கைக்கூலியாகிவிட்டார் என்று சொன்னார்கள். இன்று வரை அவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதனால்தான் அவரது இறுதிச் சடங்குகளுக்கு புதின் செல்லாததுகூட அங்கே ஒரு பொருட்டாக இல்லை. கோர்பசேவை முன்வைத்து, சோவியத் என்ற கட்டமைப்பு சிதறியதன் பின்னணியை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.

இவை தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் மொத்தமாக விரட்டியடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் நரகத் தீவு குறித்து சிவசங்கரி எழுதியுள்ள கட்டுரை, சசி தரூர் குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாய் மாலில் ஒரு திர்ஹாமுக்கு என்ன வாங்க முடியும் என்று ஆராயும் நசீமாவின் கட்டுரை, அதிகம் தெரியாத வாட்சப்பின் சில நூதன வசதிகளை வெளிச்சமிடும் வெங்கடரங்கனின் கட்டுரை என இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். மேலும் சிறப்பான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: இளையராஜா

    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து...

    இசை

    ஷேக் சின்ன மௌலானா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

    “எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து...

    அறிவியல்-தொழில்நுட்பம்

    குரலாப்பரேஷன்

    அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ  சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது...

    நம் குரல்

    டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

    டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...

    சுற்றும் பூமி

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

    சிந்தித்த வேளை

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 2

    2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

    Read More
    உரு தொடரும்

    உரு – 2

    சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...

    Read More
    error: Content is protected !!