Home » Home 07-09-2022

வணக்கம்

எழுத்து, இசை, ஓவியம் உள்ளிட்ட எந்த நுண்கலையாயினும் சரி. சராசரி ரசனைக்கு / மேம்பட்ட ரசனைக்கு என்று எப்போதும் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வந்திருப்பார்கள். இரு தரப்பு ரசிகர்களுக்கும் எப்போதும் உரசல் இருக்கும். ரசனை மாறுபாடு சார்ந்த மோதல்கள் எழும். காலம் தோறும் உண்டு. உலகம் முழுதும் உண்டு.

இந்தியாவில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் உண்டென்றால் அது இளையராஜா மட்டுமே. அவரை விமரிசிப்பவர்கள்கூட இசைக்கு அப்பாற்பட்ட விவகாரங்களுக்காக மட்டும்தான் விமரிசிப்பார்களே தவிர, இசையை அல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்ணைப் போல வாழ்வோடு ஒன்றிவிட்ட இசை அது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறது. அவர் இசையமைக்கும் விதம் குறித்துக் கார்த்திகேயன் நாகராஜன் எழுதியிருக்கும் கட்டுரையும் சரி; எந்த அம்சங்கள் அவரை ‘இசையமைப்பாளர்’ என்கிற பொதுவான இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து மேதை என்ற பீடத்தில் அமர வைக்கிறது என்று ஆராயும் என். சொக்கனின் கட்டுரையும் சரி; எப்படி அவர் நம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறார் என்று சுட்டிக் காட்டும் மகுடேசுவரனின் கட்டுரையும் சரி. வெறுமனே துதி பாடும் எழுத்தல்ல. மிகுந்த நுட்பமும் கூர்மையும் கொண்ட கவனிப்பின் விளைவுகள். இளையராஜாவை ரசிப்பதை வாழ்வின் முதல் பணியாகவும் பிறவற்றை அடுத்தும் வைத்துக்கொண்டு வாழ்பவரான பொ. காத்தவராயன், ராஜாவின் பாடல்கள் எப்படியெல்லாம் பிறரால் கையாளவும் களவாடவும் பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் பாடல்களை உடனுக்குடன் யூ ட்யூபில் கேட்க வசதியாக ஆங்காங்கே லிங்க் தரப்பட்டுள்ளது.

சென்ற வாரம் காலமான முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத்தின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த கம்யூனிஸ்டுகள், அந்தக் கட்டமைப்பு சிதைந்ததன் பின்னணியையோ, அதற்கான உண்மைக் காரணங்களையோ குறிப்பிட்டுப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. சோவியத் சிதைந்ததற்கு முழுப் பொறுப்பும் கோர்பசேவ்தான் என்று பழியைத் தூக்கி அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மை முற்றிலும் வேறு. கோர்பசேவுக்கு முன்னால் சோவியத்தை ஆண்டவர்களின் காலத்து அவலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெடித்துச் சிதறியபோது கோர்பசேவ் பதவியில் இருந்தார் என்பதே சரி. மறுமலர்ச்சி-வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அவர் பேசியதும் அதை நோக்கி அடியெடுத்து வைத்ததும் ரஷ்யர்களுக்கு அன்று புரியவில்லை. மேற்குலகின் கைக்கூலியாகிவிட்டார் என்று சொன்னார்கள். இன்று வரை அவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதனால்தான் அவரது இறுதிச் சடங்குகளுக்கு புதின் செல்லாததுகூட அங்கே ஒரு பொருட்டாக இல்லை. கோர்பசேவை முன்வைத்து, சோவியத் என்ற கட்டமைப்பு சிதறியதன் பின்னணியை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.

இவை தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் மொத்தமாக விரட்டியடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் நரகத் தீவு குறித்து சிவசங்கரி எழுதியுள்ள கட்டுரை, சசி தரூர் குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாய் மாலில் ஒரு திர்ஹாமுக்கு என்ன வாங்க முடியும் என்று ஆராயும் நசீமாவின் கட்டுரை, அதிகம் தெரியாத வாட்சப்பின் சில நூதன வசதிகளை வெளிச்சமிடும் வெங்கடரங்கனின் கட்டுரை என இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். மேலும் சிறப்பான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: இளையராஜா

    நம் குரல்

    டிஎம்எஸ்: ஒரே குரல்… எத்தனை அவதாரம்!

    டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...

    வெள்ளித்திரை

    பொன்னியின் செல்வன் – விமரிசனம்

    பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு...

    இசை

    இளையராஜா எவ்வாறு இசையமைக்கிறார்?

    முன் குறிப்பு: இளையராஜா இசையமைக்கும் விதம் குறித்து மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் – அருகிருந்து பார்த்து, எழுதப்பட்ட கட்டுரை இது.  கட்டுரை...

    இசை

    ஒரு மேதையை இனம் காண்பது எப்படி?

    இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின்...

    சுற்றும் பூமி

    உலகம்

    சாலையெங்கும் ஆரஞ்சு!

    துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...

    உலகம்

    பைடனுக்கு வந்த சிக்கல்!

    ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...

    உலகம்

    இடைக்காலப் போர் நிறுத்தம்

    தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...

    உலகம்

    பூமியின் சாம்பியன்கள்!

    ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை...

    சிந்தித்த வேளை

    நம் குரல்

    நீதிக்குத் தலை வணங்கு

    மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...

    தொடரும்

    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 1

    டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...

    Read More
    தொடரும் வான்

    வான் -11

    “ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 79

    79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 7

    07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 78

    78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

    Read More
    தொடரும் ப்ரோ

    ப்ரோ-7

    1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...

    Read More
    error: Content is protected !!