Home » உலகைக் கலக்கிய தமிழ்நாட்டு மாப்பிள்ளை
விளையாட்டு

உலகைக் கலக்கிய தமிழ்நாட்டு மாப்பிள்ளை

நவம்பர் 7 2023. மெல்போர்னில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் விஜயலக்ஷ்மி தம்பதியினரின் அலைபேசிகள் இரவு பத்து மணியிலிருந்து ஓயாமல் ஒலிக்க ஆரம்பித்தன. காதிலிருந்து கீழே வைக்க முடியாத அளவு தொடர்ந்து பாராட்டு மழை. “நானே இன்னும் மாப்பிள்ளையிடம் பேசவில்லை. இனிமேல் தான் தொடர்புகொள்ள வேண்டும்” என்று அவர் சொல்லச் சொல்லக் கேட்பவர் யாருமில்லை. அவர் மாப்பிள்ளை செய்த சாதனை அப்படி. தனி ஒருவனாகப் போராடி தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரது அணியை மீட்டு, வெற்றிக்கு வித்திட்டார். இந்த வகைப் போட்டிகளின் மிகச் சிறந்த ஆட்டம் என்று வருங்காலத்தில் விளையாட்டுலகம் இதைக் கண்டிப்பாக நினைவுகூரும்.

இத்தனைக்கும் கடந்த வாரம் அவர் கால்ப் விளையாடிவிட்டு திரும்பி வரும்போது வண்டியிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு ஒரு போட்டியில் விளையாடவில்லை. அடித்து ஆடக் கூடியவர் என்றாலும் ஒரு மேட்ச் வின்னர் என்ற பெயர் அவருக்கு நிலைத்ததில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!