Home » Archives for நர்மி

Author - நர்மி

Avatar photo

சுற்றுலா

இசுறுமுனியா

இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில் முதலில் தோன்றிய பௌத்த மடாலயம் எதுவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?  இசுறுமுனியா விகாரையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் விகாரை. அநுராதபுரம் பௌத்த...

Read More
சுற்றுலா

பௌத்த விகாரபுரம்

அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை மகாவம்சம் சொல்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த இளவரசன் விஜயன் மிகவும் துர்நடத்தை கொண்ட இளவரசனாக காணப்பட்டிருக்கிறான் எனவும், அவனையும் அவனது 700 நண்பர்களையும்...

Read More
சுற்றுலா

சீதையின் அக்கினிப் பிரவேசமும் பவுத்த விகாரமும்

சீதையை இராவணன் கடத்தி கொண்டுவந்து விட்டான். அவள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பதைக் கண்டறியவே பல மாதங்கள் எடுக்கிறது. கிட்டத்தட்ட சீதை கடத்தப்பட்டு பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஒருவாறாக அனுமன் இலங்கைத் தீவு முழுவதும் அலைந்து சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இராமனுக்குச் சொல்லியாயிற்று. இனி...

Read More
சுற்றுலா

யார் இந்தப் பூர்வகுடிகள்?

இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி...

Read More
சுற்றுலா

சிங்களத்தின் தாய்மொழி!

முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...

Read More
சுற்றுலா

மலைக்க ஒரு மலைப் பயணம்

மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது. பட்டாம்பூச்சிகள்...

Read More
சுற்றுலா

புத்தரின் எட்டு மாதக் காத்திருப்பு

மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச்...

Read More
சுற்றுலா

சீதைக் கோட்டை

இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.  நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...

Read More
சுற்றுலா

சிறு மகிழ்ச்சியின் வண்ணக் கோடுகள்

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம்...

Read More
சுற்றுலா

குகையில் அமர்ந்து எழுதிய நூல்கள்

விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!