அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படிக்கவேண்டும். கவனச் சிதறல் கூடாது. வரவேற்பறை, படுக்கையறையில் உட்கார்ந்து படித்தால் நெருக்கடிகளான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வீட்டிலேயே ஒரு படிக்கும் அறையையும் அதில் சிறிய அளவில் நூலகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
Add Comment