அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படிக்கவேண்டும். கவனச் சிதறல் கூடாது. வரவேற்பறை, படுக்கையறையில் உட்கார்ந்து படித்தால் நெருக்கடிகளான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வீட்டிலேயே ஒரு படிக்கும் அறையையும் அதில் சிறிய அளவில் நூலகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment