Home » மதுரை

Tag - மதுரை

ஆன்மிகம்

மிஸ்டர் சந்திரமௌலி…!

மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்​- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான...

Read More
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலும் மைக்கேல்,மதன,காம,ராஜன்களும்

“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...

Read More
உணவு

வடை யாத்திரை

“தினமும் காலைல ஐம்பது நூறு செலவழிச்சு டிபன் சாப்பிட முடியாது சார். ரெண்டு வடை, ஒரு மொச்சை. காலைல ஏழு மணிக்குச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினா மதியம் வரை பசிக்காது. பசிச்சா இருக்கவே இருக்கு இன்னும் ரெண்டு வடை பதினோரு மணிக்கு. சாயங்காலம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது ரெண்டு பஜ்ஜி. இல்ல...

Read More
திருவிழா

‘கெத்து’க்கு நிகரில்லை!

“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை தயாராகிவிடும். மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்துத் தொங்கும்போது எப்படிச் சுழன்றால் அவர்கள் தெறித்து விழுவார்கள் என்பதை மாடுகள் நன்கு அறியும் வண்ணம் தான்...

Read More
ஆளுமை

அனைவருக்கும் நல்லவர்

மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கத்தின் டிக்கெட் கிழிக்கும் பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்ததும், “இன்னிக்குமாடா?” என்று கேட்பார். “எங்க தலைவர் படம் நான் பாக்காம யார் பாப்பா?” என்றவாறு உள்ளே சென்ற அவன் அறுபதாவது நாளாகத் தொடர்ந்து பார்த்த திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ மதுரை...

Read More
தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு லீவ்

தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...

Read More
விளையாட்டு

மதுரையில் ஒரு சேப்பாக்கம்

‘சினிமாவையும் சித்திரைத் திருவிழாவையும் விட்டால் மதுரை மக்களுக்கென்று பொழுதுபோக்கு எதுவும் பெரிதாக இல்லை. கிரிக்கெட் மதுரை மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. ஆனால் கிரிக்கெட்டிற்கு என்று ஒரு தரமான ஸ்டேடியம் மதுரையில் இல்லை என்ற குறை மதுரை மக்களுக்கு உண்டு...

Read More
தமிழ்நாடு

எடப்பாடியும் புதிய எழுச்சியும்

“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து...

Read More
ஆளுமை

வள்ளல் அல்லது வத்தல் தாத்தா

பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த...

Read More
தமிழ்நாடு

மதுரையில் ஓர் அறிவுத் திருத்தலம்

“சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலை நகர். எனவேதான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய வேண்டும் என்று முடிவு செய்ததும் அது மதுரையில் தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்றார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். “இந்நூலகத்தின் மூலம் தென்மாவட்டங்களில் அறிவுத் தீ பரவப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!