இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அவர், தற்போது ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நீண்ட அறிக்கையே இந்த சரிவுக்கு மிக முக்கியக் காரணம். அறிக்கை வெளிவந்த இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடிகளுக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அதானி குழுமங்களின் மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment