Home » Archives for அ. பாண்டியராஜன்

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

ஆன்மிகம்

யார் இந்த அகோரிகள்?

ஜனவரி மாதத்தின் குளிர்ந்த நள்ளிரவு. நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த இரவு சாதாரணமானதல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தனர். உடலை உறைய வைக்கும் பனி ஒரு பொருட்டல்ல. இன்னும் சில நிமிடங்களில் சாஹி ஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராடலைத் துறவிகள் நடத்தி...

Read More
திருவிழா

பலூன் இருக்கு, பாத்ரூம் இல்லை!

சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் கோவளத்தை அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்தன. பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜப்பான், பிரேசில், பெல்ஜியம் ஆகிய இருபது...

Read More
இந்தியா

திரும்ப வராது, ஆனா வரும்!

2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...

Read More
ஆண்டறிக்கை

இடைவேளைக்குப் பிறகு: அ. பாண்டியராஜன்

ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல அடுத்த ஆண்டை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் உடன்...

Read More
உணவு

பிரிக்க முடியாதது சென்னையும் பிரியாணியும்

சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ சார்பில்‌ தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சி இது. என்னென்ன உணவுகள் இருந்தன? ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டிருந்தன? என்பதை...

Read More
ஆளுமை

ஈவிகேஎஸ்: இறுதி வரை காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்தவர் சொல்லின் செல்வர்...

Read More
இந்தியா

ஒரே நாடு ஒரே பிரச்சினை

நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு ஆயத்தமாகி வருகிறது. 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த...

Read More
இந்தியா

அதானியும் அமெரிக்க பிடிவாரண்ட்டும்

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மிர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மோசடி...

Read More
இந்தியா

மக்கள் தீர்ப்பா? மகளிர் தீர்ப்பா?

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு...

Read More
இந்தியா

மணி கட்ட இயலாத ஊர்

பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடங்குவதும் திரும்பத் தொடங்குவதுமென இருக்கிறது. மணிப்பூருக்கு எப்போதும் விடிவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே மோதல் ஆரம்பமானது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!