மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும் எதிர்க்கட்சிகளும் நாடெங்கும் மிகப் பரவலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அரசாங்கம்கூட வெளியே ஒன்றைச் சொல்லிக் கொண்டு உள்ளே குமுறிக்...
Tag - மகிந்த ராஜபக்சே
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால்...
‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச்...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...
மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற லெவலுக்கு வந்தது என்னவோ 2005ம் ஆண்டிற்குப் பிறகுதான். அதாவது சகல சம்பத்துக்களும் பெற்ற ஜனாதிபதியாய் மகிந்த ராஜபக்சே முடிசூடியதற்குப் பிறகுதான் விதவிதமான...
குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...
கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ...
மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...