ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு பாடல்தான். வெற்றிகரமான அறிமுகமாக இருந்தாலும் தொடர்ந்து அவர் பாடல்கள் எழுதாததன் காரணம் தெரியவில்லை. இவரது பாடல் வெளியானதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து போன டி.ஆர்.ராஜலஷ்மி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய ‘மிஸ் கமலா’ என்ற படம் 1936-ல் வெளியானது. நாடகத்தில் நடித்து பிறகு திரைப்படங்களிலும் நடித்தவர். முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்துள்ளார்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment