Home » இரு வல்லவர்கள்
இந்தியா

இரு வல்லவர்கள்

சுனில் கானுகோலு-சசிகாந்த் செந்தில்

மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில் முக்கியக் குழுக்களை அமைத்திருக்கிறார்கள். காரிய கமிட்டியையும் தூர் வாரியிருக்கிறார்கள்.

கர்நாடகாத் தேர்தல் வெற்றி கட்சியை நிமிரச் செய்திருக்கிறது. அடுத்தடுத்து வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் இதே சுறுசுறுப்பைக் காட்டினால்தான் மக்களவைத் தேர்தல் கைகொடுக்கும்.
காங்கிரஸின் அரசியல் விவகாரத் துறைக்கு, சோனியாவே தலைமை வகிக்கிறார். ஆனால் கவனம் ஈர்ப்பது காங்கிரஸின் டாஸ்க் போர்ஸ் அணிதான். டெல்லி 15 ஜிஆர்ஜி வார் ரூமில் நடந்த முதல் கூட்டத்தில் ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜீவால , அஜய் மக்கன், வேணுகோபால், சுனில் கனுகோலு போன்றவர்கள் பங்கேற்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!