16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? இது கலையல்ல. மாயமந்திரமல்ல. அற்புதமோ அதிசயமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். எதுவும் ஒன்றென உணர்ந்தவர்களுக்குப் புரியும்...
Author - பா. ராகவன்
15. சூத்திர முனி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை...
27. மீதமுள்ளது அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு குழப்பம் வரும். நிறைய யோசிப்பதாக எண்ணிக்கொண்டு, சிறிய குவளைக்குள் பாதி நிறைந்த தேநீரை ஆறச் செய்வதற்காக உருட்டிக்கொண்டே இருப்பது போல ஒரு...
14. குறி இன்றைக்கு உனக்கு அம்பெய்யக் கற்றுத்தருகிறேன்; புறப்படு என்று என் தகப்பன் சொன்னான். உடனே அம்மா ஓடிச் சென்று, என்றோ பத்திரப்படுத்தி வைத்திருந்த காட்டெருமையின் கீழ்வரிசைப் பல் ஒன்றை எடுத்துச் சிறிய துணியில் முடிந்து என் வலது தோளில் தாயத்தாகக் கட்டிவிட்டாள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும்...
13. அருளும் பொருளும் ஹேமந்த ருதுவின் முதல் சுக்ல பட்சம் தொடங்கியிருந்தது. காற்றே உறைந்துவிட்டாற்போல வெளியை துஷாரம் குவிந்து நிறைத்திருந்தது. தருக்களின் இலைகளிலும் கிளைக் கொம்புகளிலும் தடித்த தேகத்திலும்கூட வெண்படலம் மேவியிருந்தது. குருகுலத்தில் இருந்த பதினெட்டு பர்ணசாலைகளின் மேற்கூரைகளும்...
12. மின்மினி அவன் வயதைக் கணிக்க முடியவில்லை. ஒரு கணம் என் தகப்பனின் வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. உடனே அவன் இன்னும் மூத்தவனாக இருப்பான் என்றும் தோன்றியது. சட்டென்று இரண்டுமில்லை; அவன் வலு குன்றாத ஒரு வயோதிகன் மட்டுமே என்று நினைத்தேன். ஏழடி உயரம் இருந்தான். ஓடத்தின் துடுப்பை நிமிர்த்தி...
11. புருஷன் சர்சுதி ஒரு தெய்யம் என்று என் தகப்பன் சொன்னான். அந்த குருகுலத்துக்கு அருகே ஓடிய நதியின் கரைக்கு நான் சென்றதில்லை. நாம் அங்கே செல்லக்கூடாது என்று தகப்பனும் தாயும் திரும்பத் திரும்பச் சொல்லி வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் ஏன் கூடாது என்று ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்த்தேன். அவர்கள்...
10. சொல்மாறாட்டம் நான் செய்வது தருமமில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்பாவச் செயலுக்காக நான் ஏந்திச் சுமக்கவேண்டிய கொடுந்துயரம் எதுவென்றும் அறிவேன். ஆயினும் இதனை நான் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. மறையும் இறையும் மாளாதிருக்கும்வரை என் தரப்பின் நியாயம் ஒரு ஜீவ தாரிணியாக...
9. வான் கண்டேன் அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன், ‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய...
8. மாயமுனி ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை நிகர்த்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் தோன்றியது. உடனே அவன் ஒரு நூற்றுக் கிழவன் என்றும் தோன்றியது. அவனது தலைமுடி, பின்புறத் தொடைகளைத் தாண்டிக்...