புதிய போதை மருந்துகளால் அமெரிக்கர்கள் சீரழிவது சரித்திரத்துக்குப் புதிதல்ல. சில காலமாக அது இல்லாதிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய மருந்தின் பெயர் ஜைலுஜீன் (xylazine – உச்சரிப்பு முறை:zai·luh·zeen). இந்த மருந்தை டிரான்க், ட்ரான்க் டோப், ஜாம்பி மருந்து, குதிரை மருந்து என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் சீரழிக்கிறது. இதை உட்கொண்டால் தோன்றும் அறிகுறிகள் முதலில் தோலில் உண்டாகும் காயங்கள். படிப்படியாக உடல் முழுக்கப் பரவி தோலில் செதில்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட தோல் ரத்தமும் சீழுமாக அழுகி உடலிலிருந்து கொட்ட ஆரம்பிக்கிறது. ஆசிட் ஊற்றினாலோ அல்லது தீப்பற்றி எரிந்தாலோ காயம் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது. உச்சக்கட்ட பயங்கரம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment