புதிய போதை மருந்துகளால் அமெரிக்கர்கள் சீரழிவது சரித்திரத்துக்குப் புதிதல்ல. சில காலமாக அது இல்லாதிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய மருந்தின் பெயர் ஜைலுஜீன் (xylazine – உச்சரிப்பு முறை:zai·luh·zeen). இந்த மருந்தை டிரான்க், ட்ரான்க் டோப், ஜாம்பி மருந்து, குதிரை மருந்து என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் சீரழிக்கிறது. இதை உட்கொண்டால் தோன்றும் அறிகுறிகள் முதலில் தோலில் உண்டாகும் காயங்கள். படிப்படியாக உடல் முழுக்கப் பரவி தோலில் செதில்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட தோல் ரத்தமும் சீழுமாக அழுகி உடலிலிருந்து கொட்ட ஆரம்பிக்கிறது. ஆசிட் ஊற்றினாலோ அல்லது தீப்பற்றி எரிந்தாலோ காயம் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது. உச்சக்கட்ட பயங்கரம்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment