ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக் கண்காட்சி என்பது சென்னை மக்களைச் சிறிது குழப்பி இருக்கிறது. மூன்று நாள் சர்வதேசம் என்றால் மற்ற நாளெல்லாம் என்ன? அல்லது இம்முறை மூன்று நாள் மட்டும்தான் புத்தகக் காட்சியா? அல்லது இது தனியே அது தனியே நடக்குமா? இது முடிந்தபின் அதுவா, அது முடிந்தபின் இதுவா? சர்வதேசக் கண்காட்சிக்கும் பபாசிக்கும் சம்பந்தம் உண்டா அல்லது அரசு தனியே நடத்துமா – இச்சந்தேகங்கள் எல்லாம் இனி வரும் நாள்களில் தீர்க்கப்பட்டுவிடும்.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
Add Comment