Home » Archives for மெட்ராஸ் பேப்பர்

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

நம் குரல்

வாழைப்பழ சோம்பேறிகள்

தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். பதற்றமான பகுதிகள் என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டிய இடங்களில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாகப்...

Read More
தமிழ்நாடு

பத்து ஓட்டு பஜார்

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...

Read More
நம் குரல்

வாக்களிக்கும் நேரம்

குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள் சரியாக இருக்க வேண்டும். மின்சாரம் சிக்கலின்றிக் கிடைக்க வேண்டும். கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த...

Read More
மின்நூல்

வைர சூத்திரம் – மின்நூல்

மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம். இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மின்நூலை உங்களுக்கு வழங்குகிறோம். வைர சூத்திரம் என்பது ஜென் தத்துவ உலகில் மிக முக்கியமானதொரு கருவி. மகாயான பவுத்தத்தின் ஓரங்கம். சுய...

Read More
நம் குரல்

நூறைத் தொடும் நேரம்

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 25

‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத்...

Read More
நம் குரல்

விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப் பிடிகள் இறுக்கப்படுகின்றன. டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து, பாரதிய ஜனதா பதற்றத்தில் செயல்படுகிறது; தோல்வி பயத்தில்...

Read More
நம் குரல்

வேண்டாத உருப்படிகள்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில் பதினெட்டு வயது நிறைந்த புதிய தலைமுறை. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்பது நமது...

Read More
நம் குரல்

பிரித்துப் போட்டு விளையாடு

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது...

Read More
நம் குரல்

குற்றமும் தண்டனையும்

ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இன்றுவரை வழக்கிலிருந்தல்ல; ஜாமீனில்கூட வெளியே வரவில்லை. அவரது அமைச்சர் பதவி தொடர்ந்தே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!