‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான வஜிர அபேவர்தன என்பவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இன்னும் சில ஆண்டுகளுக்கு ‘மீளவே முடியாது’ என்று பொருளாதார நிபுணர்களால் சத்தியம் செய்து கூறப்பட்ட தேசத்தில் ஜனாதிபதி ரணிலின் ஆட்சி நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அடிப்பொடிகளும் எடுபிடிகளும் சொல்வது போல அத்தனை சீக்கிரத்தில் எல்லாமே தலைகீழாகி ஷங்கர் பட க்ளைமேக்ஸ் காட்சிகள் போல ஓவர் நைட்டில் அனைவரும் திருந்தி புகார்ப் பெட்டிகள் எல்லாம் காலியாகி நாடு ஸ்திரத்தன்மையடைந்து விட்டதா..?
இதைப் படித்தீர்களா?
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
Add Comment