கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில் மட்டுமே போக்குவரத்து வசதி இருந்து வந்தது. விதவிதமான எயார்லைன்ஸ் சேவைகளில் அவரவர் தேவைக்கேற்றபடி கட்டணம் செலுத்தி ஒன்றரை மணித் தியாலங்களுக்குள் இமிக்ரேஷன் சம்பிரதாயங்களையும் முடித்துப் போய்ச் சேரலாம். பயணத்தின் போது சாதாரணப் பயணி ஒருவர் தம் எடை போக, அதிகபட்சம் முப்பது கிலோ பொருள்களைச் சுமக்கலாம். விமானச் சேவைகளின் வழமையான கெடுபிடிகளும் உள்ளடங்கலாக இருக்கையின் சூடு தணிவதற்குள் பயணம் முடிந்துவிடும். கட்டிய பணத்திற்குத் தரும் ஒருவேளை உணவைக்கூட ரசித்துச் சாப்பிட போதியளவு நேர அவகாசம் கிடைக்காது.
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
Add Comment