கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாற்பது நகரங்களில் போராட்டங்கள் உச்சம் பெற்றுள்ளன. இண்டர்நெட் சேவையை அரசு முடக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலவரம். எல்லாப் பக்கமும் பதற் . பெண்கள் தங்கள் ஹிஜாபை கழற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்கள். முடியை வெட்டி எறிந்து எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் படிப்படியாக வலுவுற்று உலகம் முழுக்க வாழும் ஈரானியர்களின் ரத்த நாளங்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறது. ஐரோப்பிய நகரங்களில் இருக்கும் ஈரானியத் தூதரகங்கள் தினமும் போராட்டக்காரர்களால் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment