புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின் வருகைக்கும் ராணியின் மறைவுக்குமான தொடர்பு காக்கை இருக்கப் பனம் பழம் விழுந்த கதை போன்றது தான். இரண்டு வாரம் நாடு முழுவதும் சோகமயம். யாரும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ராணியை அடக்கம் செய்யும் வரை அக்கறை செலுத்தவில்லை.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment