நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, மாற்று மருத்துவம். நம் மக்கள் என்றென்றும் ஒரு மெல்லிய ஐயத்துடனேயே அணுகும் விஷயங்களுள் ஒன்று. மாற்று மருத்துவம் பற்றி எழுதினால் படிப்பார்கள்; யாராவது சொன்னால் கவனமாகக் கேட்டுக்கொள்வார்கள்; பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் உடனே அருகிலுள்ள அலோபதி க்ளினிக்குக்குத்தான் போவார்கள். அது சரியானதும் மீண்டும் மாற்று மருத்துவத்தின்பால் காதல் பிறக்கும்.
மக்கள்மீது தவறில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ‘மாற்று மருத்துவம்’ என்று பெயரிட்டு அதை இரண்டாம் பட்சமாக்கியது யாரென்று யோசித்தால் இதன் காரணம் புரிந்துவிடும்.
இந்த இதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விரிவான-செறிவான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர் சரவணகுமாரின் பேட்டி, அலோபதி மருத்துவமுறையின் முக்கியத்துவத்தை முன்னால் வைத்தே பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது. டாக்டர் முஹம்மது சலீம், மூலிகைகளின் பெயரால் நடக்கும் மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
மாற்று மருத்துவம் என்பது நம் நாட்டில் மட்டும் நடைமுறையில் உள்ளதல்ல. உலகெங்கும் இது உண்டு. அமெரிக்காவில் இம்மருத்துவத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பத்மா அர்விந்த் விளக்குகிறார். ப்ரானிக் ஹீலிங் குறித்த நசீமாவின் கட்டுரை முற்றிலும் புதியதொரு திறப்பைத் தருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கும் இயற்கை முறை மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் கண்டு ரிப்போர்ட் செய்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.
விளம்பர ஜாலங்களுக்கும் மார்க்கெடிங் மயக்கங்களுக்கும் ஆட்படாமல், உண்மையிலேயே பக்க விளைவுகளற்ற பூரண உடல் நலன் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்கு இந்தச் சிறப்புப் பகுதி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய அச்சுறுத்தும் சக்தியாகப் புறப்பட்டிருக்கும் ஹூத்தி இயக்கத்தைக் குறித்த ஓர் அறிமுகத்தினை தீபன் திருமாறன் எழுதியிருக்கிறார். ஹூத்தி அமைப்பினைக் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இதுவே.
இலங்கை நிலவரம் குறித்துத் தொடர்ந்து நமக்கு எழுதி வரும் ஸஃபார் அஹ்மத், இந்த இதழில் இலங்கை ஜனாதிபதி பதவியின் வானளாவிய அதிகாரங்களைக் குறித்து விளக்கியிருக்கிறார். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்போது நிகழும் அபத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் சரித்திரம்தோறும் கண்டு வந்திருக்கிறோம். தற்கால உதாரணம், இலங்கை.
சென்ற வாரம் முழுதும் செய்திகளில் மிதிபட்ட பின்லாந்து அதிபர் சன்னா மிரெல்லா மரின் குறித்து பாபுராஜ் நெப்போலியன் எழுதியுள்ள கட்டுரை, ஒரு வெற்றிப் பெண்மணியின் வேறொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவ்வண்ணமே, சொந்த நாட்டுக்கு ஓர் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாவாகச் சென்ற அனுபவங்களை விவரிக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, ஒரு தேசத்தின் மறு முகத்தைத் துலக்கிக் காட்டுகிறது.
மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளிவரும் ஒரே சர்வதேச வார இதழ். தமிழில், வேறெந்தப் பத்திரிகைகளிலும் உங்களுக்குப் படிக்கக் கிடைக்காதவை அனைத்தும் இங்கே ரசிக்கக் கிடைக்கும். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். இது, நாம் சேர்ந்து இழுக்கும் தேர்.
வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: மாற்று மருத்துவம்
தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது...
துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும்...
பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த...
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு...
அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும்...
கையளவு உலகம்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
ருசிகரம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...