Home » Home 24-08-2022

வணக்கம்

இது நுழைவுத் தேர்வுகளின் காலம். மார்ச் மாதம் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள் அத்தனைப் பேரும் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல். மருத்துவம். சட்டம். துறை எதுவானாலும் நுழைவுத் தேர்வுகள் அவசியம் உண்டு.

இது உலகம் முழுதும் உள்ள நடைமுறைதான் என்றாலும் இங்கே அதிகம் விவாதிக்கப்படவும் விமரிசிக்கப்படவும் காரணங்கள் பல உள்ளன. ஏனெனில், மதம் போலவே கல்வியும் அரசியல் கலக்கும்போது வேறு வடிவம் எடுத்துவிடுகிறது. இது பல லட்சக் கணக்கான இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பது அரசியல்வாதிகளுக்குப் பொருட்டில்லை. அவரவர் நியாயங்களை உலகப் பொது உண்மையாக முன்வைப்பதால் வருகிற விபரீதங்கள்.

இருக்கட்டும். இந்த இதழில் நுழைவுத் தேர்வுகள் குறித்த நான்கு கட்டுரைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நீட் - மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கும் உள்ள மிக நுணுக்கமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டும் பா. ராகவனின் கட்டுரை, அந்தச் சிறு வித்தியாசம் உண்டாக்கும் விபரீதங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது.

நுழைவுத் தேர்வுகளைப் போர்க்களத்துக்குச் செல்வது போலக் கருதும் மனோபாவம் ஏன் நம்மிடம் உள்ளது? தோல்விக்காகத் தற்கொலை வரை செல்ல எது தூண்டுகிறது? மன அழுத்தங்கள் இன்றி நுழைவுத் தேர்வுகளை அணுகவே முடியாதா? முடியும். அதற்கான உபாயங்களைச் சொல்லித் தருகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

கடந்த சில ஆண்டுகளாக நாம் கூர்ந்து கவனித்து வந்த வகையில், ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவது போலவே அவர்களது அம்மாக்களும் தயாராகிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் பிள்ளைகளைத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பிள்ளைகளைவிட இந்தத் தேர்வின் சூட்சுமம் அறிந்தவர்களாகிவிடுகிறார்கள். நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தாய்மார்கள் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்களுடைய அனுபவக் கதைகள், தேர்வெழுதும் பிள்ளைகளின் அனுபவத்தினும் பெரிது. இந்த இதழில் அத்தகைய ‘தேர்வுத் தாய்மார்களின்’ அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

இவை தவிர, நீட் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை இரண்டு மாணவர்கள் இவ்விதழில் விவரித்திருக்கிறார்கள் (பிரபு பாலாவின் கட்டுரை).

கல்வி என்பது பாதுகாப்பான எதிர்காலத்துக்கான ஒரு சௌகரியமான முதலீடு. துரதிருஷ்டவசமாக, அது ஒரு பெரும் தொழிலாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் காலத்தில் பின் தங்கிவிடாதிருக்க முயற்சியும் பயிற்சியும் செய்யலாம் அல்லவா? அதைத்தான் மையப்படுத்துகிறது இந்த இதழில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரைகள்.

பெரும்பாலும் கேளிக்கையை முன்னிலைப்படுத்தும் வெகுஜனப் பத்திரிகைகள் மத்தியில் மக்களுக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பேசுகிற ஓர் இதழாக மெட்ராஸ் பேப்பர் வருகிறது என்று சென்ற வாரம் ஒரு வாசகர் எழுதியிருந்தார். நமது நோக்கம் சரியானவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேருகிற மகிழ்ச்சியை அந்தச் சிறிய குறிப்பு அளித்தது. மெட்ராஸ் பேப்பர் இன்னும் பரவலான வாசகர்களைச் சென்று சேர உங்கள் ஆதரவு தேவை. இதன் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு புதிய வாசகரைச் சந்தாதாரர் ஆக்குவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெற உதவ முடியும்.

செய்வீர்கள் அல்லவா?

சிறப்புப் பகுதி: நுழைவுத் தேர்வுகள்

கல்வி

பொறி வைத்துப் பிடித்தல்: சில குறிப்புகள்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல்...

கல்வி

நீட்: அஞ்சாதே!

அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப்...

கல்வி

கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள்...

கல்வி

துவளாதே!

2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை...

எட்டுத் திக்கு

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!