2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு களங்கள் என்றாலும் கூட்டணிக் கூத்துக்களையும், அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் பார்க்கும் போது எல்லா ஊரிலும் அரசியல் என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதுவும் மலேசியாவின் பளபளப்பையும் மீறிக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதன் அரசியல் தளம் நாறிக் கொண்டு இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே...
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச்...
Add Comment