2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு களங்கள் என்றாலும் கூட்டணிக் கூத்துக்களையும், அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் பார்க்கும் போது எல்லா ஊரிலும் அரசியல் என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதுவும் மலேசியாவின் பளபளப்பையும் மீறிக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதன் அரசியல் தளம் நாறிக் கொண்டு இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை...
Add Comment