நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள நிர்வாக அதிகாரிகள் ஒரு பக்கம் நிறைந்திருந்தார்கள். மறுபுறம் திருவிழாவைக் காண்பதற்காக ஆயிரக் கணக்கில் பொது மக்களும் மைதானத்தில் கூடியிருந்தார்கள். எத்தனை காலம் ஆகிவிட்டது அக்காட்சியை நேரில் கண்டு! பழைய தாலிபன் ஆட்சிக் காலத்தில் கண்டது. அதன்பின் இல்லை. அதே தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் (அக்குன்ஸதா பொறுப்புக்கு வந்தது ஆகஸ்ட் 15, 2021) இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண்...
Add Comment