Home » சென்னையில் ஓர் அடாவடி பஜார்
சந்தை

சென்னையில் ஓர் அடாவடி பஜார்

தி நகர் உஸ்மான் சாலையில ரங்கநாதன் தெருவை அடுத்திருக்கும் சிறிய சந்துதான் சத்யா பஜார். வேலன் ஸ்டோருக்கு எதிர்ப்புறம் ‘அன்னை சத்யா பலபொருள் அங்காடி’ என்ற ஆர்ச் நம்மை வரவேற்கும். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்களுக்கான நுழைவாயில் இது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து ரங்கநாதன் தெருவிற்குள் வருபவர்கள், ராமநாதன் தெருவிற்குள் நுழைந்தால் அங்கும் சத்யா பஜாருக்கான ஆர்ச் நம்மை வரவேற்கும்.

உஸ்மான் சாலை நுழைவாயில் வழியாகப் பஜாருக்குள் சென்றோம். முதல் சில கடைகளைத் தாண்டிச் செல்லவே முடியவில்லை. அங்கேயே வாங்க வைத்து அப்படியே திருப்பி அனுப்புகிறார்கள். பெண்கள் எனில் கையில் இருக்கும் பிள்ளையைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக வாங்க வைக்கிறார்கள். இளைஞர்களிடம் நேரடியாகவே நகரவிடாமல் வாங்க வைக்கும் வியாபார யுக்தியைப் பின்பற்றுகிறார்கள். வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள். விலை மலிவு, தரமும் பிடிக்கிறது வாங்குகிறார்கள். இதைத் தாண்டி உள்ளே சென்றால்தானே வேறு என்னென்ன இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள முடியும்? உள்ளிருக்கும் கடைக்காரர்களை மட்டுமல்ல பாதசாரிகளையும் முன்னேற விடாத ஓர் அக்கப்போரை முதல் சில கடைகளில் அரங்கேற்றுகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!