ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக மறுக்க முடியாதுதான். பணம் என்பது ஒரு பக்கத்திலிருந்து மட்டுமல்ல; இரண்டு பக்கங்களிலிருந்தும் கொடுக்கப் பட்டதாகத்தான் சொல்லப் பட்டது. ஆயினும் அதுவே வெற்றி தோல்விக்கான காரணம் என்றும் நம்ப முடியவில்லை. காங்கிரஸ் பெற்ற வாக்கு 64.58 சதவீதம். அதிமுக பெற்ற வாக்கு 25.75 சதவீதம். வெற்றிக்கும் தோல்விக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் எப்படித்தான் வந்தது?
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment