‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு...
வணக்கம்
இந்திய சுதந்திரத்துக்கும் சல்மான் ருஷ்டிக்கும் சம வயது. ஹாதி மதார் என்கிற இருபத்து நான்கு வயது மத அடிப்படைவாதி ஒருவன் அம்மூத்த எழுத்தாளரின் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறான். பல இடங்களில் கத்திக் குத்து. ருஷ்டியின் ஒரு கண் பார்வை அநேகமாக இனி இல்லாது போகும் என்று தெரிகிறது.
அவன் ருஷ்டியைப் படித்திருப்பானா, அவரைக் குறித்து அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா, இஸ்லாத்தையாவது அவன் முழுதும் அறிந்திருப்பானா போன்ற வினாக்களுக்கு விடை இல்லாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த இரானியத் தலைவர் அயாதுல்லா கொமேனி காலமாகியே முப்பத்து மூன்று வருடங்களாகிவிட்டன. நபர்கள் மறையலாம்; அடிப்படைவாதமும் அது உருவாக்கும் கொலை வெறியும் அப்படியேதான் இருக்கின்றன. நாம் வாழும் இக்காலக்கட்டத்தின் ஆகப் பெரிய அபாயம் இதுவே.
நரேந்தர் தபோல்கர், கௌரி லங்கேஷ், கே.கே. கல்புர்கி என்று இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மரணத்தின் பின்னணியில் இருந்து இயக்கியதும் இதே மத அடிப்படைவாதம்தான். இந்த மதம் அந்த மதம் என்ற பாகுபாடே இதில் இல்லை. ஒரு பெரும் சமூகத்துக்குப் பொதுவான மந்தை மனோபாவத்தை உருவாக்கி, அதை வன்முறையில் ஊற வைத்து, வார்த்தெடுக்கும் பணியையே இவர்கள் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். உலகெங்கும் நிகழ்வது இது. எல்லா நாடுகளிலும். எல்லா மதங்களிலும். எல்லா காலக்கட்டங்களிலும்.
அந்த இளைஞன் ருஷ்டியின் ஒரே ஒரு புத்தகத்தையாவது முழுதும் படித்திருந்தால் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. மதவாதிகளால் ஒரு சாத்தானாகச் சித்திரிக்கப்படும் அம்மனிதர் எவ்வளவு சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். அமைப்புகளையும் அரசுகளையும் அரசியல் போலிகளையும்தான் அவர் விமரிசித்தாரே தவிர, மனித குலத்தின் மீது அவருக்குள்ள உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் எல்லையற்றது.
சென்ற ஆண்டு இந்தியாவில் கோவிட் தொற்று உக்கிரமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். இங்கே கொத்துக் கொத்தாக நிகழ்ந்துகொண்டிருந்த மரணங்களைக் காணச் சகிக்காமல் சர்வதேச சமூகத்திடம் இந்தியாவுக்கு உதவச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த முதல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
மும்பையில் பிறந்தவர் என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பிரிட்டிஷ் எழுத்தாளர். அமெரிக்காவில் வசிப்பவர். பிரச்னைக்குள்ளான அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முதல் முதலில் தடை செய்த நாடு இந்தியா. அதன்பின் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ, இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுக்கவோகூட அவர் இந்தியாவுக்கு வருவது சிக்கலுக்குள்ளானது. (2012ம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதாக இருந்து, மத அடிப்படைவாதிகளின் மிரட்டலால் திட்டத்தைக் கைவிட்ட சம்பவம் ஒன்று உள்ளது.)
இன்றைக்கு அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில்கூட, அவர்மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து இங்கிருந்து எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம். கலைஞர்களை-எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டாம். குறைந்தபட்சம் மதிக்கக்கூடத் தெரியாத - மதிப்பை வெளிக்காட்டினால் சிக்கல் வருமோ என்று அஞ்சி நடுங்கும் சமூகமாக இதனை மாற்றி வைத்திருக்கும் சக்தி எது?
வருத்தப்பட்டு உச்சுக் கொட்ட வேண்டாம். வெட்கித் தலைகுனியவும் வேண்டாம். சிறிது சிந்திக்கலாம். நமது பெரும்பாலான பிரச்னைக்குக் காரணம், சிந்திப்பதை நிறுத்திவிட்டு, எதையாவது அல்லது யாரையாவது கண்மூடித்தனமாகப் பின்பற்றிப் போவதே.
சல்மான் ருஷ்டி நலம் பெற்று மீள நம் பிரார்த்தனைகள்.
சிறப்புப் பகுதி: மாமியார் (எக்ஸ்போர்ட் குவாலிடி)
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப்...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
நம்மைச் சுற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...