Home » நாள்தோறும் » Page 15

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 30

30. உடை அரசியல் காந்தி இளவயதில் தொப்பி, மேலங்கி, கழுத்தில் டை, இரட்டைவடத் தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட கடிகாரம் என்று மேல்நாட்டுப் பாணியில் விதவிதமாக உடுத்தியவர்தான், அதுதான் நாகரிகம் என்று நினைத்தவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் அவருக்கு அலுத்துவிட்டன. சுற்றியிருக்கிற மற்றவர்கள் என்ன...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 30

30. உளக் குவிப்பு முன்பொரு முறை அந்த பிராமண ரிஷி என்னிடம் சொன்னான், ‘சூத்திர முனியே, நீ ஒரு சராசரி மனிதன்தான். ஆனால் சராசரி மனிதர்களால் எட்ட இயலாத உளக் குவிப்பு உன்னிடம் இருக்கிறது. தருணத்தின் தேவைக்கேற்ப நீ உன் தேகத்தையும் சித்தத்தையும் ஒற்றைப் புலனாக்கிக்கொண்டுவிடுகிறாய். இது அபூர்வமானது.’ நானொரு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 29

29. குஜராத்தின் மைந்தர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான பெண் போராளிகள், தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அன்றைக்கு இங்கிருந்த சமூகச் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியலில் ஈடுபடுவதற்குத் துணைநிற்காவிட்டாலும், கண்முன்னால் தாய்நாட்டுக்கு இப்படியோர் அநீதி...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 29

29. தெய்வங்களின் உரையாடல் நான் கன்னுலா. கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து புறப்பட்டு, ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் ஊற்றை அடைந்து, அங்கிருந்து நதியின் தடம் பிடித்து நடந்துகொண்டிருக்கும் சாரனின் இளைய சகோதரி. இவ்விதமாகத் தலையைச் சுற்றிச் சொன்னால்தான் சரித்திரத்துக்குப்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 28

28. பேசும் குருவி பல நாள்களாக நடந்துகொண்டிருந்தோம். கணக்கு வைத்துக்கொள்ளாமல் நெடுந்தொலைவைக் கடந்திருந்தோம். ஆனால் கவனப் பிசகாகக் கூட சர்சுதியின் கரையைவிட்டு விலகிச் செல்லவேயில்லை. ஆதிசிவக் குன்றிலிருந்து புறப்பட்டுத் தனியாக வந்தபோதுகூட சிறிது தடம் நகர்ந்து மீண்டும் வந்து சேர்ந்துகொள்வேன். வழியில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 28

28. இரு கண்கள் ‘ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்றார் கோகலே, ‘நீங்கள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லது.’ அப்போது மும்பையின் ஆளுநராக இருந்தவர் ஃப்ரீமன்-தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட வில்லிங்டன் பிரபு. பின்னாட்களில் (1931...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 27

27. தொப்புள் கொடி முனி என்னைக் காட்டிலும் பிராயம் மிகுந்தவன். ஒரு தோராயக் கணக்கில்தான் சொல்கிறேன். எனக்கு முப்பது சம்வத்சரங்களுக்கு முன்னர் அவன் பிறந்திருக்க வேண்டும். ஆனால் தோற்றத்தில் இப்போதும் முப்பது பிராயத்து வாலிபனைப் போலத்தான் இருந்தான். அது பற்றி எனக்கு வியப்பெல்லாம் இல்லை. உடலத்தைப்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 27

27. தலைவர்ன்னா பாராட்டுவோம் ஜனவரி 12 அன்று காலை, இந்தியப் பிதாமகர் (The Grand Old Man of India) என்று பெருமையுடன் அழைக்கப்படும் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் காந்தி. அப்போது தாதாபாய் நௌரோஜிக்கு வயது 90. தன்னுடைய அரசியல் பணியாலும் எழுத்துகளாலும் உலக அளவில் இந்தியாவின் முகமாக...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 26

26. பதினைந்தணா சேவை ஜனவரி 10ம் தேதி காலை, காந்தி பஜார் கேட் என்ற இடத்துக்குச் சென்று தன்னுடைய உறவினர்கள் சிலரைச் சந்தித்தார். பஜார் கேட் பகுதியில் குஜராத்திகள் பெருமளவில் வசித்துவந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றுத் திரும்புகிற தங்களுடைய மண்ணின் மைந்தரை அவர்கள் மிகவும் பெருமையுடன்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 26

26. எண்மர் கிராத குலத்து சார சஞ்சாரன் பைசாச மேருவுக்குச் சென்றதன் காரணத்தால் அவன் சூத்திர முனி குத்சனைச் சந்திக்க நேர்ந்து, அவனைக் குறித்து அறிந்து கொண்டான். இருபத்து மூன்று சம்வத்சரங்களாக அச்சாரனின் வரவின் பொருட்டுக் காத்திருந்த சூத்திர முனி குத்சன் தனது சரிதத்தை அவன் சிந்தைக்குள் செலுத்தி வைக்க...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!