Home » நாவல் » Page 3

Tag - நாவல்

சலம் நாள்தோறும்

சலம் – 95

95. வந்தவர்கள் என் உடலற்ற தேகம் சிலிர்க்கிறது. மனமற்ற சிந்தையில் ஒரு பழைய மணம் மெலிதாக நுழைந்து சுழல்கிறது. காரணம் தெரியாமல் உள்வெளியில் எதுவோ ஒன்று குதியாட்டம் போடுகிறது. இது நான் எதிர்பாராத உணர்ச்சி. எதனால் அப்போது அப்படி ஆனதென்று எனக்கு விளங்கவில்லை. வெளியெங்கும் அலைந்து திரிந்து அடங்கித்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 94

94. வேள்வித் தீ அன்றைக்கு அதிகாலையிலேயே அதர்வனின் சீடர்கள் தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, ஆசிரம வளாகத்தை சுத்தம் செய்து, அலங்கரிக்கத் தொடங்கினார்கள். வனத்திலிருந்து பறித்து வந்த புஷ்பங்களைக் குடில்களின் முகப்பில் கொத்துக் கொத்தாகச் சொருகி வைத்தார்கள். அதர்வனின் குடிலுக்கு வெளியே இருக்கும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 93

93. ஒடுங்குமிடம் எல்லாம் எல்லோருக்கும் புதிதாக இருந்தது. விபரீதமாக ஏதேனும் நடக்குமோவென்று எல்லோரும் நினைத்தார்கள். வித்ருவின் பிராமணர்கள் வேள்விகள் செய்ய ஆயத்தமானார்கள். சத்ரியர்களும் பணிகளும் பிறரும் காண்கின்ற அனைவரையும் அழைத்து அழைத்து தானங்கள் செய்தார்கள். பிழைபட்ட நிமித்தங்கள் அனைத்தும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 92

92. அறிந்தவை அவன் திரண்டிருந்தானா, சிதறியிருந்தானா என்று அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்தறிய இயலாது. ஆனால் வேறொன்றாகியிருந்தான் என்பதைக் கண்டதும் தெரிந்துகொள்ள முடியும். அவன் வந்து சில தினங்களே ஆகியிருந்தன என்றாலும் வித்ருவில் வசிக்கும் பிராமணர்கள் யாருக்கும் அவன் வேண்டாதவனாகியிருந்தான். பிராமணர்கள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 91

91. தரிசனம் அவன் உண்மையானவன். நேர்மையானவன். தூய மனம் கொண்டவன். தவறியும் பிழைபட்ட செயலொன்றைச் செய்ய மாட்டான். அனைத்தினும் முக்கியம், என்னை அவன் வசீகரித்து ஏமாற்ற விரும்ப வாய்ப்பே இல்லை. இவற்றிலெல்லாம் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் அவன் தாள் பணிந்து சீடனாக அமர்ந்தால்தான் என் வினாவுக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 90

90. ஒரே ஒரு பிழை நான் குத்சன். என்னைப் போன்றதொரு பாக்கியசாலியை இந்தப் பிருத்வி என்றென்றும் காணப் போவதில்லை. நான் தோல்விகளின் ஸ்தூலம். என்னைவிட இன்னொரு அபாக்கியசாலி பிரளயத்துக்குப் பிறகு உதிக்கவிருக்கும் இன்னொரு யுகத்திலும் இருக்க வாய்ப்பில்லை. நான் அடைந்தவை அநேகம். இழந்தவை அநேகம். கண்டவை அநேகம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 89

89. மூடன் ருத்ர மேருவின் சிகரத்திலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தேன். பாறைகள் நிறைந்த சர்சுதியின் கரைக்கு வந்து சேர்ந்தவுடனேயே பசிக்கத் தொடங்கியது. எத்தனை தினங்கள் உண்ணாதிருந்திருக்கிறேன் என்ற நினைவே இல்லை. அது ஒரு பொருட்டாகத் தோன்றவுமில்லை என்பது மிகுந்த நிறைவை அளித்தது. அதே சமயம் தாயைக்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 88

88. சிக்‌ஷாவல்லி வெளி இருண்டிருந்தது. குளிர் சற்று அதிகமாக உள்ளதாக சாரன் சொன்னான். அப்படியா என்று கேட்டேன். அவன் புன்னகையுடன் என்னையே சில கணப் பொழுதுகள் பார்த்துக்கொண்டிருந்தான். ‘என்ன?’ ‘உணர்ச்சிகள் இல்லாத நீ ஒரு பிணத்துக்குச் சமம் என்று பல சமயம் நினைப்பேன். ஆனால் சகிக்க முடியாத இந்தக்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 87

87. வெண் சங்கு நான் அவனைக் கொலை செய்யத்தான் வித்ருவுக்கு வந்தேன். அறிமுகமான உடனே அதனை அவனிடம் சொல்லவும் செய்தேன். என் கையால்தான் தன் மரணம் நிகழுமென்பதை அவன் அறிந்திருந்தான். அதைக் குறிப்பிட்டே அவன் என்னை வரவேற்றான். எங்கள் இருவரிடத்திலும் பொய் இல்லை. பாசாங்கில்லை. ஒளித்து மறைத்து ஒன்றைச் செய்யும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 86

86. கூர் அவர்கள் கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். அது சரஸ்வதி பாயும் சத்தத்தினும் பெரிதாக இருந்தது. அவர்கள் நா தப்பிப் பேசத் தொடங்கினார்கள். அது உலூகத்தின் ஓலம் போலிருந்தது. எங்கே, யார் முன்னே நிற்கிறோம் என்பதை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள். குடம் குடமாகச் சோமத்தைக் குடித்துவிட்டு கீழே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!