தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத்...
Tag - கிருமி
தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது...
பொருளாதாரம் சர்வதேசமயமாக்கப்பட்டபின் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் கூட பொதுச்சொத்தாகிவிட்டன. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதியில் ஒரு புது வைரஸ் வந்தாலும், எல்லாருக்கும் கிலி வந்துவிடுகிறது. கோவிட் தொற்றுநோய் வந்து ஓர் ஆட்டம் காட்டியபின், லேசாகக் காய்ச்சல் வந்தாலும் சந்தேகம் வந்துவிடுகிறது. தற்போது...
உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது...
புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த்...
அகழ்வாராய்ச்சிகளில் திகைப்பூட்டக்கூடிய ஏதாவது அகப்படுவது வழக்கம்தான். சமீபத்தில், தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரம்பெர்க்கில் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஓரிடத்தைக் குறி வைத்து அகழ்ந்தார்கள். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகளையும், சில சடலங்களின் மிச்சங்களையும்கூடக்...
தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப்...
மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...
2018-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவை மூன்று முறை கதிகலங்க வைத்துவிட்டுச் சென்ற ஒரு வைரஸ், நான்காவது முறையாக மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தினை ஆடத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு மலேசியாவில் சுங்காய் நிபா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் (Nipah virus) தான் அது. இரண்டு துணை வகைகள்...
மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...