Home » ஆபீஸ் – 32
தொடரும் நாவல்

ஆபீஸ் – 32

32 கை

வங்கிக்கு வந்து பார்த்தால் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்தார். முகவரியை விசாரித்தபடியே அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான்.

உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டீங்களா என்று கேட்டவர், அவன் முகத்தில் இருந்த களைப்பையும் வியர்வையையும் பார்த்துவிட்டு சாப்பிடச்சொன்னார். அதன் பின்னர் ஹாலில் இருந்த சேர்களை எதிரெதிரே போட்டுக்கொண்டு அமர்ந்தார். அவன், சாதாரணமாக இலக்கியம் அது இது என்று பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய வீடு குடும்பம் வேலை என்று விசாரித்தவர், நேரடியாகக் காவிக்கு வந்துவிட்டார்.

எதுக்காக இப்படிக் கெளம்பி வந்தீங்க என்றவர், அவன் பதிலை எதிர்பார்க்காமல் தம் பாட்டுக்கும் பேச ஆரம்பித்துவிட்டார். வார்த்தைகளில் கடுமையில்லை எனினும் அவன் கேள்விப்பட்டிருந்த, கதைகள் மூலம் தெரியவந்திருந்த வண்ணதாசனுக்கு நேர்மாறாக அவர் குரலில் இருந்த கண்டிப்பு தொனி, இவரா இப்படி என்கிற வியப்பைக் கொடுத்தது.

இல்ல… ஆபீஸ்ல ஒரு ஆபீஸர்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!