கருங்கல் பாறை போன்று இறுகிய முகத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோ உன் அந்தப் பிரமாண்டமான ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் எழுந்து நின்று வேகவேகமாய் கைதட்டத் தொடங்கியது. கிம் தன் ஆசனத்திற்கு வந்து பார்வையால் கும்பலைக் கழுவியவாறு பேசத் தொடங்கினார். ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என்று அவரவர் தராதரத்திற்கேற்ப விதவிதமான பதக்கங்களுடன் ராணுவ உடைகள் தரித்திருந்தார்கள். பாதிப் பேரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உலக சரித்திரத்தில் இத்தனை நீண்ட கைதட்டலைப் பெறும் ஒரே ஆத்மா அதிபர் கிம்மாகத்தான் இருக்க வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment