Home » கூட்டம்
சிறுகதை

கூட்டம்

குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன். நான் அணிந்து கொண்டிருந்த ஸ்கர்ட்டில் இருந்து பிங்க் நட்சத்திரங்கள் பறக்கின்றன. செய்தித்தாளுக்கான பணத்தை டீக்கடைப் பெண்ணிடம் நீட்டுகிறாள் அம்மா. அந்தப் பெண்ணின் நெற்றியில் இருக்கும் பெரிய பொட்டில் பாய்கிறது துப்பாக்கித் தோட்டா ஒன்று. சரிந்து கீழே விழுந்தாள் அவள். இல்லை விழுந்தது அம்மா. என் மீது விழுந்து கிடக்கிறாள். மூச்சு முட்டுகிறது. அம்மாவின் கதகதப்பு சுட்டெரிக்கும் சூடாகிறது. அம்மா கொழுந்துவிட்டு எரிகிறாள். நெருப்பில் பிங்க் நட்சத்திரங்கள். பலங்கொண்ட மட்டும் அம்மாவைத் தள்ளிவிட்டு நகர்ந்தேன்.

அம்மாவுக்கு பதில் கட்டை எரிந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றிலும் நெருப்பு. தரையில் கிடக்கும் மண்ணை அள்ளிப் போட்டு நெருப்பை அணைக்க முயல்கிறேன். அருகில் இருப்பவர்கள் எனக்கு உதவுகிறார்கள். நெற்றியில் காவிப்பட்டை. கையில் கடப்பாறை. தரையைத் தோண்டி மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். அய்யோ… இதென்ன? நெருப்பின் மீது போடாமல் என்னைக் குழியில் தள்ளி என் மீது போடுகிறார்களே. உயிருடன் என்னைப் புதைக்காதீர்கள். நிறுத்துங்கள். கத்திக் கொண்டே இன்னும் நகர்ந்து செல்கிறேன். எங்கிருந்தோ அமிலம் நிரப்பிய பாட்டில் வந்து என் மீது விழுகிறது. முகம் எரிகிறது. கத்துகிறேன். கதறுகிறேன். இல்லை முகத்தில் எரிச்சல் இல்லை. சில்லென்று இருக்கிறது. மூச்சு விட முடிகிறது. எல்லாம் கனவாகத்தான் இருக்கவேண்டும். கண்களை முழுதாகத் திறந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

பிரயத்தனப்பட்டுக் கண்களைத் திறக்கிறேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. இங்கும் அங்குமாக ஒரு சிலர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். அசைவில்லை. ஆம் பிணங்கள்தான். நானும் செத்துப் போய்விட்டேனா? வலது கை தோள்பட்டைக்குக் கீழே வெட்டுப் பட்ட இடத்தில் வழியும் ரத்தமும் வலியும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதைச் சொன்னது. எங்கே இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்த முயல்கிறேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!