கடன் கொடுப்பதற்கு எண்ணற்ற நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதிநிறுவன வங்கிகள், ஊரக வங்கிகள் என்று ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை மட்டும் நூற்றி முப்பத்தி ஏழு. பல அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளும் கடனை வாரி வழங்கத் தயாராக இருக்கிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர்க் கடன் எனக் கடன்கள் பல வகை. இயன்றவரை கடன் வாங்காமல் தவிர்ப்பது நல்லது எனப் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கடன் வாங்குவது தவிர்க்க இயலாத சூழலில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும், எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Add Comment