இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
இந்தப் பத்திரிகை வெளிவரத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாளை ஆண்டு விழா.
தமிழில் எளிமையாகவும் தரமாகவும் பல்வேறு துறைகள் சார்ந்து ஆழமாகவும் எழுதத் தெரிந்த ஒரு புதிய தலைமுறைக்கான களமாகத் தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் பேப்பர். தமிழ் வார இதழ்களுக்கே உரிய கல்யாண குணங்கள் ஏதுமின்றி, ஒரு மாறுபட்ட அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்க நினைத்தோம். நினைத்ததைச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அளிக்கும் வரவேற்பின் மூலம் அறிகிறோம்.
இந்த ஐம்பத்து மூன்று வாரங்களில் சுமார் நாற்பது புதிய எழுத்தாளர்களை மெட்ராஸ் பேப்பர் தமிழுக்குத் தந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், பதினேழு உலகச் சிறுகதைகள், சற்றும் சமரசமற்ற உயர் தரத்தில் ஒரு நாவல் -
தவிர, நமது எழுத்தாளர்கள் பன்னிரண்டு பேரின் பதிமூன்று புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளியாகியிருக்கின்றன. எழுதக் கற்றுக்கொண்டு, ஓராண்டு முழுதும் எழுதி எழுதிப் பழகி, பிறகு பத்திரிகைக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி, அதில் தேர்ச்சி பெற்றுப் புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய தமிழ் பதிப்புச் சூழலில் சந்தேகமின்றி சாதனை. நல்ல எழுத்தை எப்போதும் கொண்டாடுவோம்.
நிற்க. நாளை (ஜூன் 1, 2023) மாலை இந்திய நேரம் 7 மணிக்கு மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் zoom வழியே நடக்கிறது. நூறு பேர் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலும். பிறரும் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க ஸ்ருதி டிவி யூட்யூப் நேரலை செய்கிறது. நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு, நமது பத்திரிகையின் எழுத்தாளர்கள் / செய்தியாளர்களுடன் கலந்துரையாட விரும்புவோர் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து zoom link பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் ‘கல்கி’ சீதா ரவி, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே. அசோகன் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். ‘நேர்காணல் செய்யும் கலை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திரமௌலியும் ‘எழுத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யாவும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மெட்ராஸ் பேப்பர் இதுவரை செய்தவை குறித்து ஆசிரியரும் தொழில்நுட்ப ஆலோசகரும் உரையாற்றுவார்கள். பிறகு, ‘இனி என்ன செய்யலாம்?’ என்ற தலைப்பில் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவினருடன் வாசகர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தந்து உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அளிக்கலாம்.
மெட்ராஸ் பேப்பரின் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.
நாளை மாலை விழாவில் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
மேலும் ரசிக்க
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...