Home » Home 30-11-2022

வணக்கம்

இந்த இதழின் மொழிப் புதையல் பக்கங்களை வழக்கமான பத்திரிகைக் கட்டுரைகளைப் போலல்லாமல், சற்று நிறுத்தி நிதானமாக, தினமொன்றாகப் படித்துப் பாருங்கள். இவை சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் எப்படித் துள்ளி எழுந்து பொலிந்து நின்றது என்பதைப் பறைசாற்றும்.

பாரதி, உவேசா, வஉசி, பிச்சமூர்த்தி, லாசரா என்ற பெயர்களைச் சொன்னால் கணப் பொழுது கும்பிட்டுவிட்டு நகர்ந்துவிட ஒரு சாராரும், யார் அவர்கள் என்று கேட்க ஒரு தலைமுறையும் இன்று உள்ளனர். ஆனால் மொழியின் மீது இம்முன்னோடிகள் கொண்டிருந்த ஆளுமை மிகப் பெரிது. இன்றைக்கு எழுதப்படுகிற சேதாரத் தமிழுக்கும் அவர்கள் வளர்த்த மொழிக்கும் சம்பந்தமே கிடையாது. தவம் இருந்து பெற்றதொரு பெண் குழந்தையைப் போல அவர்கள் மொழியை வளர்த்திருக்கிறார்கள். தனித்தமிழ் ஒரு பக்கம். மணிப்பிரவாளம் ஒரு பக்கம். அடுக்கு மொழி ஒரு பக்கம். அமைதியும் ஆழமும் பொதிந்த எழுத்து ஒரு பக்கம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக எழுதினாலும் யாரும் மொழிச் சிதைவுக்கு இடமளித்ததில்லை.

மொழி சார்ந்த கவனமும் அக்கறையும் ஏன் நமக்கு முக்கியமாகிறது? ஏனெனில், அதைத் துறந்த தலைமுறையின் காலத்தில்தான் பிற மொழித் திணிப்பு முயற்சிகள் மேலோங்குகின்றன. தகவல் தொடர்பு என்பதற்கு அப்பால் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதப் பயிற்றுவிக்கப்படும்போதே, ஒரு தொல்மொழியின் அடையாள வேர்கள் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. நாம் பாப்கார்ன் சாப்பிட்டுப் பசியாறப் பழகத் தொடங்குகிறோம்.

உலகில் இதுவரை அழிந்த மொழிகளின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதில் வாழ்ந்தோரின் அக்கறையின்மை தவிர வேறொரு காரணம் இராது. ஆக்கிரமிப்பு அரசியல், ஏகாதிபத்திய அரசியல், திணிப்பு அரசியல் எல்லாம் இருக்கத்தான் செய்யும். காலம் தோறும் உலகெங்கும் இதெல்லாம் இருந்து வந்தவைதாம். ஆனால் நம் கவனம் என்ன? நம் அக்கறை எதில் உள்ளது? நமக்கு எது முக்கியம் என்று பார்க்க வேண்டுமல்லவா? நம் மொழியைக் காக்கவும் செழிக்கச் செய்யவும் நம் பங்கான சிறு துரும்பு என்னவென்று கணப் பொழுது சிந்திக்க வேண்டுமல்லவா?

இந்த மொழிப் புதையல் சிறப்பிதழிலேயே முருகு தமிழ் அறிவனின் ‘உயிருக்கு நேர்’ தொடர் ஆரம்பமாவது ஓர் எதிர்பாராத பொருத்தம். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற தொடர் இது.

இது தவிர ராஜிக் இப்ராஹிம் எழுதும் ‘கடவுளுக்குப் பிடித்த தொழில்’, உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) சார்ந்து தமிழில் எழுதப்படுகிற முதல் தொடர். மனித குலத்தை அச்சுறுத்தும் நவீன கால நோய்த் தொற்று, மரபணுக் குளறுபடிகள், உணவுப் பஞ்சம், காலநிலை மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு சாத்தியமா? எனில், எப்போது? எப்படி? இந்தத் தொடரில் உங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

இன்னொரு புதிய தொடர், ந. ஜெயரூபலிங்கம் எழுதும் ‘தல’ புராணம். இது வெற்றிகரமான தலைமைச் செயல் அதிகாரிகளின் (CEOs) உலகை, மன அமைப்பை, அவர்கள் சிந்திக்கும் விதத்தை, முடிவெடுக்கும் லாகவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. உலகின் அதி உயர் பதவிகளில் நம் நாட்டவர்கள் அமரும்போதெல்லாம் நாம் பெருமை கொள்கிறோம். பாராட்டி மகிழ்கிறோம். ஆனால் அந்த உயரத்தைத் தொட அவர்கள் பயணம் செய்த பாதையைக் குறித்துச் சிந்தித்திருப்போமா? இந்தத் தொடர் அதனைச் செய்கிறது.

இவை தவிர உலகக் கோப்பை கால்பந்தாண்டப் போட்டிகளை முன்வைத்து கத்தாரின் அளப்பரிய வளர்ச்சியின் சரிதத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இராக்கில் கண்டறியப்பட்டுள்ள நீருக்கடியில் புதையுண்ட புராதன நகரம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, ராகுல் காந்தியின் நடைப் பயணம் குறித்த பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கூர்ந்து வாசிக்க ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

படித்து ரசித்த பிறகு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்.

இங்கும் அங்கும்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

இந்தியா

விசா ரத்து சாம்பியன்!

பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

இந்தியா

பதிலடிக் காலம்

அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

சிறப்புப் பகுதி: மொழிப் புதையல்

புதிய தொடர்கள்

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
error: Content is protected !!