Home » Home-10-08-2022

வணக்கம்

வாசக நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட, மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்துக்குப் பிறகு நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நம் பக்கத்து நாடுகளை ஒரு பார்வை பார்த்தால் போதும். இந்திய தேசியம் என்பது மதச் சார்பின்மை என்னும் வலுவான சித்தாந்தத்தால் கட்டப்பட்டது. இன்று வரை நாம் பெற்ற நல்லவை அனைத்தும் அதன் மூலம் சாத்தியமானவை. இன்று வரை இங்கே நிகழ்ந்த விபத்துகள் யாவும் மதம் முன்னுக்குத் தள்ளப்படும்போது நேர்ந்தவையே. இன்றைய தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் இன்னும் மேலே செல்வதில் சிக்கல் இராது.

இந்த இதழ், எதிர்பாரா விதமாக இரண்டு சிறப்புப் பகுதிகளைக் கொண்டு அமைந்துவிட்டது. ஒன்று, முன்பே அறிவித்திருந்த மின்நூல் உலகம். இன்னொன்று இந்திய சுதந்திரப் பவழ விழாக் கொண்டாட்டம்.

இந்தத் தலைமுறை அறிந்திராத மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரும் சிந்தனையாளருமான ம.பொ.சிவஞானத்தின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ வரலாற்று ஆவணத்தை மறு அறிமுகப்படுத்தும் கட்டுரையும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஓர் அரிசியில் எழுதுவது போல நுணுக்கமாகச் செதுக்கியிருக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரையும் இப்பகுதியின் சிறப்புப் பக்கங்கள்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான பத்திரிகைகளில், சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு அப்பால் வேறென்ன செய்திகள் இடம் பெற்றிருந்தன? பழைய பத்திரிகைப் பிரதிகளுக்குள் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

ஊர் முழுதும் பொன்னியின் செல்வனைப் பேசிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன் யாத்திரை ஒன்றை நடத்தி முடித்துத் திரும்பியிருக்கிறார். சுவாரசியம் மிக்க அவரது பயண அனுபவங்களைத் தொகுத்துத் தருகிறார் பால கணேஷ்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுள் ஒன்றுதான் இப்போது வெளியாகியிருக்கிறது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இன்று மாநிலம் முழுதும் பிரபலம். கலெக்டராக எண்ணியவரைக் கவிஞனாக்கி அழகு பார்த்த வாழ்க்கையை இந்த இதழில் அவர் திரும்பிப் பார்க்கிறார்.

மின்நூல் உலகம் சிறப்புப் பகுதிக்கென முகில் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. கிண்டிலில் நூல் வெளியிடுவது சார்ந்து பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் மனத் தடைகளைத் தகர்க்கும் கட்டுரை அது.

அந்த மனத்தடைக்குக் காரணமான ‘திருட்டு’ விவகாரம் குறித்தும் தனியே ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. எத்துறையானாலும் வளர்ச்சி என்பது சில இடர்பாடுகளையும் உள்ளடக்கியதுதான். ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு என்னும் செயல்பாடே இன்னும் தவழும் நிலையில்தான் இருக்கிறது என்னும்போது இந்த இடர்கள் பூதாகாரமாகத் தோன்றுவது புரிந்துகொள்ளக் கூடியதே.

அச்சு-மின்நூல்-ஒலிநூல்-ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இனி வரும் காலம் இவை எதையும் ஒதுக்கி வைக்க இடம் தராது. இந்தச் சிறப்புப் பகுதி அதைத் தெளிவாகப் புரியவைக்கும்.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழை மேலும் சிறப்பாகக் கொண்டு வர உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள்.

  • சிறப்புப் பகுதி: மின்நூல் உலகம்

    நுட்பம் மின்நூல்

    மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்

    புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில்...

    நுட்பம் மின்நூல்

    ஒரு பெரும் பாய்ச்சல்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப்...

    நுட்பம் மின்நூல்

    திருட்டுலகம்

    பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும்...

    நுட்பம் மின்நூல்

    கிண்டிலில் புத்தகம் போட்டுக் கோட்டை கட்ட முடியுமா?

    இந்தக் கட்டுரையில் வரும் ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு காற்புள்ளியும் நான் பெற்ற அனுபவங்களிலிருந்து எழுதப்படுவது...

    இந்தியா - 75

    இந்தியா

    மம்தாவின் கைகளில் அடங்குமா ‘இண்டியா’?

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய்...

    குற்றம்

    குற்றங்கள் குறைவதில்லை

    ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குற்ற வழக்குகள் ஆடில்...

    அறுசுவை

    நம் குரல்

    எங்கே போகிறோம்?

    உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...

  • தொடரும்

    விண்வெளி

    வான் – 1

    அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 68

    68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 43

    43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 69

    69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

    Read More
    error: Content is protected !!