Home » Home-10-08-2022

வணக்கம்

வாசக நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட, மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்துக்குப் பிறகு நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நம் பக்கத்து நாடுகளை ஒரு பார்வை பார்த்தால் போதும். இந்திய தேசியம் என்பது மதச் சார்பின்மை என்னும் வலுவான சித்தாந்தத்தால் கட்டப்பட்டது. இன்று வரை நாம் பெற்ற நல்லவை அனைத்தும் அதன் மூலம் சாத்தியமானவை. இன்று வரை இங்கே நிகழ்ந்த விபத்துகள் யாவும் மதம் முன்னுக்குத் தள்ளப்படும்போது நேர்ந்தவையே. இன்றைய தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் இன்னும் மேலே செல்வதில் சிக்கல் இராது.

இந்த இதழ், எதிர்பாரா விதமாக இரண்டு சிறப்புப் பகுதிகளைக் கொண்டு அமைந்துவிட்டது. ஒன்று, முன்பே அறிவித்திருந்த மின்நூல் உலகம். இன்னொன்று இந்திய சுதந்திரப் பவழ விழாக் கொண்டாட்டம்.

இந்தத் தலைமுறை அறிந்திராத மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரும் சிந்தனையாளருமான ம.பொ.சிவஞானத்தின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ வரலாற்று ஆவணத்தை மறு அறிமுகப்படுத்தும் கட்டுரையும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஓர் அரிசியில் எழுதுவது போல நுணுக்கமாகச் செதுக்கியிருக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரையும் இப்பகுதியின் சிறப்புப் பக்கங்கள்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான பத்திரிகைகளில், சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு அப்பால் வேறென்ன செய்திகள் இடம் பெற்றிருந்தன? பழைய பத்திரிகைப் பிரதிகளுக்குள் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

ஊர் முழுதும் பொன்னியின் செல்வனைப் பேசிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன் யாத்திரை ஒன்றை நடத்தி முடித்துத் திரும்பியிருக்கிறார். சுவாரசியம் மிக்க அவரது பயண அனுபவங்களைத் தொகுத்துத் தருகிறார் பால கணேஷ்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுள் ஒன்றுதான் இப்போது வெளியாகியிருக்கிறது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இன்று மாநிலம் முழுதும் பிரபலம். கலெக்டராக எண்ணியவரைக் கவிஞனாக்கி அழகு பார்த்த வாழ்க்கையை இந்த இதழில் அவர் திரும்பிப் பார்க்கிறார்.

மின்நூல் உலகம் சிறப்புப் பகுதிக்கென முகில் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. கிண்டிலில் நூல் வெளியிடுவது சார்ந்து பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் மனத் தடைகளைத் தகர்க்கும் கட்டுரை அது.

அந்த மனத்தடைக்குக் காரணமான ‘திருட்டு’ விவகாரம் குறித்தும் தனியே ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. எத்துறையானாலும் வளர்ச்சி என்பது சில இடர்பாடுகளையும் உள்ளடக்கியதுதான். ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு என்னும் செயல்பாடே இன்னும் தவழும் நிலையில்தான் இருக்கிறது என்னும்போது இந்த இடர்கள் பூதாகாரமாகத் தோன்றுவது புரிந்துகொள்ளக் கூடியதே.

அச்சு-மின்நூல்-ஒலிநூல்-ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இனி வரும் காலம் இவை எதையும் ஒதுக்கி வைக்க இடம் தராது. இந்தச் சிறப்புப் பகுதி அதைத் தெளிவாகப் புரியவைக்கும்.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழை மேலும் சிறப்பாகக் கொண்டு வர உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள்.

சிறப்புப் பகுதி: மின்நூல் உலகம்

மின்நூல்

வைர சூத்திரம் – மின்நூல்

மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம். இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக...

நுட்பம் மின்நூல்

மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்

புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில்...

நுட்பம் மின்நூல்

ஒரு பெரும் பாய்ச்சல்

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப்...

நுட்பம் மின்நூல்

திருட்டுலகம்

பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும்...

இந்தியா - 75

இந்தியா

போட்டுவைத்தப் போக்குவரத்துத் திட்டம் ஓகே கண்மணி!

தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில்...

அறுசுவை

நம் குரல்

ஒட்டுமில்லை, உறவுமில்லை!

கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை...

தொடரும்

உரு தொடரும்

உரு – 27

27. எழுத்துரு அழகியல் உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 27

27. இயந்திரவியல் மனிதன் முதலில் தன் வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திரங்களை உருவாக்கினான். அது அவனுக்கு மூன்றாவது கரமென அமைந்தது. அவன் செய்யும் பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு அவன் வாழ்வை எளிமைப்படுத்தியது. ஒரு மனிதன் செய்யும் வேலையை இன்னொரு இயந்திரம் செய்வது சரிதான். பல மனிதர்களின் வேலையை அது...

Read More
aim தொடரும்

AIM IT – 27

எங்கிருந்தோ வந்தான்… பயணத்திற்காக நாம் செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அன்றாடம் சில மணி நேரப் பயணம் என்பது இயல்பான ஒன்றாகியுள்ளது. பெருநகரங்களில் வாழ்வோர் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இவ்வாறான பயணங்களில் விரயமாக்க வேண்டியுள்ளது. இதற்கென்ன தீர்வு? ”வொர்க் ஃப்ரம் ஹோம்”. இல்லம் தேடி அலுவலகம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 126

126. சுதந்திரா  கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார்.  அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச்  சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 27

27. தள்ளுபடித் தந்திரங்கள் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 27

27. மீதமுள்ளது அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு குழப்பம் வரும். நிறைய யோசிப்பதாக எண்ணிக்கொண்டு, சிறிய குவளைக்குள் பாதி நிறைந்த தேநீரை ஆறச் செய்வதற்காக உருட்டிக்கொண்டே இருப்பது போல ஒரு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 122

122 பயிற்சி தன்னால் காட்டமுடிந்த அதிகபட்ச பணிவு, குர்த்தாவுக்கு பட்டன் போட்டுக்கொள்வதுதான் என்பதைப்போலக் கதவைப் பேருக்குக்கூடத் தட்டாமல் (தட்டிவிட்டு வரக்கூடாதா என்ற கேள்விக்கு, திறந்திருக்கிற கதவை ஏன் தட்டவேண்டும் என்கிற எதிர்க்கேள்விதான் பெரும்பாலும் பதிலாய் வரும்) பாண்டுரங்கன் சூப்பிரெண்டண்டண்ட்...

Read More
error: Content is protected !!