28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வணக்கம்
கோவிட் பரவல் அதிகரித்திருப்பதாகச் செய்தி வருகிறது. மீண்டும் முகக் கவசம் அணியச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவல்லாமல் இன்னொரு புதிய ரக வைரஸ் தாக்குதலும் ஆரம்பமாகியிருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், தலைவலி, காய்ச்சல். மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.
உலகெங்கும் கிருமிகளால் மனிதர்கள் அவதியுறுவதும் மீள்வதும் உலகு தோன்றிய நாளாக உள்ளதுதான். நம் தலைமுறை அதற்கு இன்னொரு சாட்சியாகிறது, அவ்வளவுதான். 2020ம் ஆண்டு பேயாட்டம் ஆடத் தொடங்கிய கோவிட் 19, அடுத்த இரண்டாண்டுகளில் அழித்துச் சென்றவை அநேகம். தொழில் முடங்கியது. வர்த்தகம் விழுந்தது. பணப் புழக்கம் குறைந்தது. பலருக்கு வேலை இல்லாமல் போனது. இழுத்து மூடப்பட்ட பல நிறுவனங்கள் இன்றுவரை திறக்கப்படவேயில்லை. பெரிய நிறுவனங்களில் கட்டாய ஆட்குறைப்பு செய்தார்கள். வேலையில் இருந்தவர்கள் எப்படியாவது அதைத் தக்கவைத்துக்கொள்ள வீட்டிலிருந்தே இரவு பகலாகப் பாடுபட்டார்கள். இங்கே அங்கே என்றில்லை. எங்கும் இதுதான். எல்லா இடங்களிலும் இதுதான். சென்ற வருடம்தான் ஓரளவு அதிலிருந்து மீண்டோம். மீண்டும் இப்போது அதே அச்சுறுத்தல்.
எச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அதற்கு ஒரு பொருளே இல்லாமல் ஆகிவிட்டது. உண்மையில், எச்சரிக்கை உணர்வு என்பது இனி நம் இயல்பாக மாறவேண்டும் போல இருக்கிறது. திரும்பத் திரும்ப முகக் கவசம், திரும்பத் திரும்ப சோப்புப் போட்டுக் கை கழுவுதல், திரும்பத் திரும்ப சானிடைசர். கூட்டம் சேரும் இடத்திலிருந்து விலகி இருத்தல்.
திரையரங்குக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால் பேருந்து, ரயில் பயணங்களை அன்றாடம் தவிர்க்க முடியுமா? டீக்கடையில் நின்று அரட்டை அடிக்காமல் இருக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியரிடம் பேசாதிருக்க முடியுமா?
எனவே நாம் செய்யக்கூடியது, தவிர்க்க முடியாதவற்றை மட்டும் செய்வது எனக் கொள்வதுதான். மேற்படி எச்சரிக்கை உணர்வை அந்தத் தருணங்களில் கைக்கொள்ளலாம். இப்போது வந்திருப்பது அல்லது இனி வரப் போவது பழைய கோவிட் அளவுக்கு வீரியம் உள்ளதாக இராது என்று நம்புவது பேதைமை. அப்படி இருக்கக் கூடாது என்று விரும்பலாமே தவிர, அலட்சியப்படுத்துவது ஆபத்தில்தான் முடியும்.
அலுவலகங்கள், பள்ளி-கல்லூரி நிர்வாகங்கள் முகக் கவசத்தை இப்போதே வலியுறுத்தத் தொடங்குவது நல்லது. ஒன்றும் இல்லாவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்றும் இருக்காது என்று நாமாக நினைத்துக்கொள்வது சரியல்ல. மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கினால்தான் அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கை வரும். அதைப் பெருகவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாமே என்பதால்தான் இந்த முன்னறிவிப்பு.
பாதுகாப்பாக இருப்போம். எச்சரிக்கையாக இருப்போம்.
உலகைச் சுற்றி
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நம்மைச் சுற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில்...
மேலும் ரசிக்க
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும்...
ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும்...
உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...