Home » Home 28-09-22

வணக்கம்

எது எல்லோருக்கும் பிடிக்குமோ, அது இந்த வார சிறப்புப் பகுதி ஆகியிருக்கிறது.

பணத்தைப் பொறுத்தவரை மூன்றே விஷயம்தான். சம்பாதிப்பது. சேமிப்பது. செலவு செய்வது. இந்த மூன்று கலைகளையும் குறித்து மூன்று வல்லுநர்கள் (சோம. வள்ளியப்பன், நியாண்டர் செல்வன், மௌலி) இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். இவை தவிர FIRE குறித்த மிக முக்கியமானதொரு கட்டுரையும் இடம் பெறுகிறது.

இன்றைய தலைமுறை முப்பத்தைந்து வயதில் ‘செட்டில்’ ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குமேல் யாருக்கும் கடமைப்படாமல், தன் விருப்பத்துக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறது. தவறில்லை. ஆனால் திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகளைச் செய்துகொண்டு கனவை நனவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளை நிதி ஆலோசகர் சதீஷ்குமார் விவரிக்கிறார்.

சம்பாதிப்பது என்கிறோம். சேமிப்பது என்கிறோம். திட்டமிடல் என்கிறோம். ஆனால் இவை அனைத்துமே அர்த்தமற்றுப் போய்விட்ட இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சூழலைச் சுட்டி, முன்னொரு காலத்தில் அனுபவிக்க வாய்த்த எளிய, இனிய, மகிழ்ச்சியான வாழ்வை நினைவுகூரும் ரும்மானின் கட்டுரை கண் கலங்க வைக்கும்.

அவ்வண்ணமே பால கணேஷ் எழுதியுள்ள சினிமாப் பணம் குறித்த கட்டுரையும், அறிவனின் பணம் வந்த பாதையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

சென்ற வாரம் வட கொரியாவின் மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை வைத்தது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு அத்தேசம் ஆயுத உதவி செய்கிறது என்பது அக்குற்றச்சாட்டு. வட கொரியா என்ன செய்யும் என்று ஆராயப் புகுமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, அத்தேசம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது. பன்னெடுங்காலமாக ராணுவம் தவிர வேறு எதிலுமே வளராமல், இருபத்தாறு மில்லியன் மக்களைக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் கிம் என்கிற ஒரு தனி நபரின் ‘நிறுவன’மாக உள்ள தேசத்தில் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட அவலமாக உள்ளது என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் ஸஃபார் அஹ்மத்.

இந்தக் கட்டுரையைப் படித்து அதன் உக்கிரத்தைத் தணித்துக்கொள்ள சிவசங்கரியின் ‘ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ’ உங்களுக்கு உதவும். நேச்சுரல்ஸ் நிறுவனர்களின் வெற்றிக் கதை, குறிப்பெடுக்க உதவும் செயலிகள் குறித்த வெங்கடரங்கனின் கட்டுரை, கத்தார் உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழாவுக்குத் தயாராவது பற்றிய நசீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் நிறையவே உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இன்னும் சிறந்த கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

சிறப்புப் பகுதி: பணம்

ஊரும் உலகும்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

நாலு விஷயம்

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!