Home » Home 24-08-2022

வணக்கம்

இது நுழைவுத் தேர்வுகளின் காலம். மார்ச் மாதம் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள் அத்தனைப் பேரும் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல். மருத்துவம். சட்டம். துறை எதுவானாலும் நுழைவுத் தேர்வுகள் அவசியம் உண்டு.

இது உலகம் முழுதும் உள்ள நடைமுறைதான் என்றாலும் இங்கே அதிகம் விவாதிக்கப்படவும் விமரிசிக்கப்படவும் காரணங்கள் பல உள்ளன. ஏனெனில், மதம் போலவே கல்வியும் அரசியல் கலக்கும்போது வேறு வடிவம் எடுத்துவிடுகிறது. இது பல லட்சக் கணக்கான இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பது அரசியல்வாதிகளுக்குப் பொருட்டில்லை. அவரவர் நியாயங்களை உலகப் பொது உண்மையாக முன்வைப்பதால் வருகிற விபரீதங்கள்.

இருக்கட்டும். இந்த இதழில் நுழைவுத் தேர்வுகள் குறித்த நான்கு கட்டுரைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நீட் - மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கும் உள்ள மிக நுணுக்கமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டும் பா. ராகவனின் கட்டுரை, அந்தச் சிறு வித்தியாசம் உண்டாக்கும் விபரீதங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது.

நுழைவுத் தேர்வுகளைப் போர்க்களத்துக்குச் செல்வது போலக் கருதும் மனோபாவம் ஏன் நம்மிடம் உள்ளது? தோல்விக்காகத் தற்கொலை வரை செல்ல எது தூண்டுகிறது? மன அழுத்தங்கள் இன்றி நுழைவுத் தேர்வுகளை அணுகவே முடியாதா? முடியும். அதற்கான உபாயங்களைச் சொல்லித் தருகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

கடந்த சில ஆண்டுகளாக நாம் கூர்ந்து கவனித்து வந்த வகையில், ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவது போலவே அவர்களது அம்மாக்களும் தயாராகிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் பிள்ளைகளைத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பிள்ளைகளைவிட இந்தத் தேர்வின் சூட்சுமம் அறிந்தவர்களாகிவிடுகிறார்கள். நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தாய்மார்கள் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்களுடைய அனுபவக் கதைகள், தேர்வெழுதும் பிள்ளைகளின் அனுபவத்தினும் பெரிது. இந்த இதழில் அத்தகைய ‘தேர்வுத் தாய்மார்களின்’ அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

இவை தவிர, நீட் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை இரண்டு மாணவர்கள் இவ்விதழில் விவரித்திருக்கிறார்கள் (பிரபு பாலாவின் கட்டுரை).

கல்வி என்பது பாதுகாப்பான எதிர்காலத்துக்கான ஒரு சௌகரியமான முதலீடு. துரதிருஷ்டவசமாக, அது ஒரு பெரும் தொழிலாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் காலத்தில் பின் தங்கிவிடாதிருக்க முயற்சியும் பயிற்சியும் செய்யலாம் அல்லவா? அதைத்தான் மையப்படுத்துகிறது இந்த இதழில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரைகள்.

பெரும்பாலும் கேளிக்கையை முன்னிலைப்படுத்தும் வெகுஜனப் பத்திரிகைகள் மத்தியில் மக்களுக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பேசுகிற ஓர் இதழாக மெட்ராஸ் பேப்பர் வருகிறது என்று சென்ற வாரம் ஒரு வாசகர் எழுதியிருந்தார். நமது நோக்கம் சரியானவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேருகிற மகிழ்ச்சியை அந்தச் சிறிய குறிப்பு அளித்தது. மெட்ராஸ் பேப்பர் இன்னும் பரவலான வாசகர்களைச் சென்று சேர உங்கள் ஆதரவு தேவை. இதன் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு புதிய வாசகரைச் சந்தாதாரர் ஆக்குவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெற உதவ முடியும்.

செய்வீர்கள் அல்லவா?

  • சிறப்புப் பகுதி: நுழைவுத் தேர்வுகள்

    கல்வி

    பொறி வைத்துப் பிடித்தல்: சில குறிப்புகள்

    பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல்...

    கல்வி

    நீட்: அஞ்சாதே!

    அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப்...

    கல்வி

    கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

    நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள்...

    கல்வி

    துவளாதே!

    2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை...

    எட்டுத் திக்கு

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 2

    2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

    Read More
    உரு தொடரும்

    உரு – 2

    சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...

    Read More
    error: Content is protected !!